search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வையிட்டு ஆய்வு"

    • நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
    • முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாமக்கல் நகருக்கு பைபாஸ் ரோடு மற்றும் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணி சுமார் 80 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும். பின்னர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மூலம் இந்த பஸ் நிலையம் திறப்பு விழா நடைபெறும்.

    இந்த புதிய பஸ் நிலை

    யத்திற்கு அணுகுசாலை அமைக்க, முதலைப்பட்டி யிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம், நெடுஞ்சாலை துறையின் கிராம சாலைகள் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 25 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பஸ் நிலையத்திற்கு பைபாஸ் ரோடுடன் கூடிய அணுகு சாலை அமைக்கப்படும். நாமக்கல் நகருக்கு புதிய பை-பாஸ் ரோடு திட்டம் ரூ. 194 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பை-பாஸ் ரோட்டில் இருந்து, புதிய பஸ் நிலையத்திற்கு 200 மீட்டர் அளவில் அணுகு சாலை அமைக்கப்படுகிறது.

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தின் மொத்த பரப்பு 12.89 ஏக்கர். சுமார் 10 ஏக்கர் பரப்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில், 50 பஸ் நிறுத்தங்கள், 57 கடைகள், 2 ஓட்டல்கள், 7 பயணிகள் காத்திருப்பு பகுதி, 2 ஏ.டி.எம் மையங்கள், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் வைப்பறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, 200 இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம், 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாமக்கல்

    நகராட்சி சேர்மன் கலாநிதி,

    துணைசேர்மன் பூபதி, கவுன்சி லர்கள் சிவக்குமார், சங்கீதா,

    நகராட்சி கமிஷனர் சென்னு

    கிருஷ்ணன், நெடுஞ்சா லைத்துறை உதவி செயற்பொ

    றியாளர் பரிமளா உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

    • டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுஜாதாவினோத் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகரசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பாலாற்றின் கரையோரம் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டும்,கடை அருகில் உள்ள காரிய மேடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.காரிய மேடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பயன்படுத்தப்படாமல் உள்ளது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    நகராட்சி பகுதியில் நடைபெறும் குடிநீர் குழாய் அமைப்பு பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து முறையாக கருத்தடை செய்ய வேண்டும்.

    நகரில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நம்ம டாய்லெட் கழிவறைகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் நகர மன்ற தலைவர்,துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு கடந்து ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், கே.பி.சந்தோஷம், குமார்,நரேஷ், ஜோதி சேதுராமன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பன்னீர்செல்வம் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.51 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்த பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் பணி முடியும் தருவாயில் உள்ளது. ரூ.51 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 292 கடைகள் வர உள்ளது.

    இதேப்போல் 153 நான்கு சக்கர வாகனங்களும், 263 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த இடம் வசதி உள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

    இங்கு துணி வாங்க வருபவர்கள் பஸ்சில் வந்து இறங்கி செல்வதற்கும், மீண்டும் துணிகளை வாங்கி திரும்பி செல்வதற்கும் சிரமம் இன்றி செல்லும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நமது மாவட்டத்தில் ஒவ்வொரு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் போது அது குறித்து முதல்-அமைச்சர் கேட்டு வருகிறார்.

    இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம்.

    இதில் சில சட்ட சிக்கல்கள் பிரச்சி னைகள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்ப டையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காரமடை அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து நானே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வேன். இதேபோல் பூந்துறை பகுதிகளிலும் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசி சுமுகமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×