search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த"

    • ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.
    • மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், பெருங்குறிச்சி ஊராட்சிக் குட்பட்ட கருந்தேவன்பா ளையம் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் மானாவாரியில் ஒருங்கி ணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.

    மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். திருச்சி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின், மானாவாரி சாகுபடியின் அங்கங்களான பயிர் சாகுபடி முறைகள், இயற்கை உரம் தயார் செய் தல் குறித்தும், திருச்செங் கோடு கால்நடை உதவி இயக்குனர் அருண்பாலாஜி பயிர் சாகுபடியில் கால்நடை வளர்ப்பின் பங்கு குறித்தும், பெருங்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் கிரி கால்நடை பண்ணை மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    கபிலர்மலை வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஊட்டம் நிறைந்த தானியங்களின் சாகுபடி குறித்தும், கபிலர் மலை வட்டார வேளாண்மை துணை அலுவலர் சக்திவேல், மயில் விரட்டி தெளிப்பு குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலா ளர் ஜோதிமணி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

    • ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

    ஈரோடு:

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 தொடர்பான அறிவிப்பு கடந்த 3-ந் தேதி வெளி யிட்டுள்ளது.

    ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்ச கங்கள், துறைகள், நிறுவ னங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பா யங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்து ள்ளது.

    இத்தேர்வில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்க லாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டு ள்ளது.

    மேலும் விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

    இப்பணிக் காலி இடங்க ளுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கணினி அடிப்ப டையிலான இத்தேர்வு களுக்கு உரிய கட்டணத்து டன் இணைய வழியாக அடுத்த மாதம் 3-ந் தேதி வரை விண்ண ப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்து வத ற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 4-ந் தேதி ஆகும்.

    தென் மண்ட லத்தில் கணினி அடி ப்படை யிலான தேர்வு ஜூலை மாதம் ஆந்திரா மாநி லத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரி யில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலு ங்கானா மாநிலத்தில் 3 மையங்க ளிலும் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

    இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக் குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளது.

    மேலும் இந்த இணைய தளம் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொ ளிகளை கண்டு பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடைய லாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • பன்னீர்செல்வம் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.51 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்த பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் பணி முடியும் தருவாயில் உள்ளது. ரூ.51 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 292 கடைகள் வர உள்ளது.

    இதேப்போல் 153 நான்கு சக்கர வாகனங்களும், 263 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த இடம் வசதி உள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

    இங்கு துணி வாங்க வருபவர்கள் பஸ்சில் வந்து இறங்கி செல்வதற்கும், மீண்டும் துணிகளை வாங்கி திரும்பி செல்வதற்கும் சிரமம் இன்றி செல்லும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நமது மாவட்டத்தில் ஒவ்வொரு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் போது அது குறித்து முதல்-அமைச்சர் கேட்டு வருகிறார்.

    இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம்.

    இதில் சில சட்ட சிக்கல்கள் பிரச்சி னைகள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்ப டையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காரமடை அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து நானே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வேன். இதேபோல் பூந்துறை பகுதிகளிலும் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசி சுமுகமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    பல்லடம் :

    பல்லடம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபல்லடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்காபுரம், பருவாய், புளியம்பட்டி, மல்லேகவுண்டம்பாளையம், பூமலுார் ஆகிய கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒரு எக்டர் பாசன நிலமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பண்ணையம் அமைத்து பயறு வகைகள் சாகுபடி செய்வதற்கு விதைகளும், முருங்கை நாற்றுகள் ஊடுபயிராகவும் வழங்கப்படும்.மேலும் பயனாளிகளுக்கு கால்நடை வாங்கவும், மண்புழு உரப்படுகைகள், தேனீ பெட்டி அமைப்பதற்கும் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு - 2021 -க்கான தாள்-1 எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.
    • பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர்.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்

    ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு - 2021 -க்கான தாள்-1 எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.

    மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்-சி, டி, உள்ளிட்ட பணியிடங்களுக்கான இந்த தேர்வை நாடு முழுவதும் பல லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் எழுதினார்கள். அதுபோல், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர்.

    விடைகள் பதிவேற்றம்

    தேர்வு முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக, மற்றும் தேர்வர்களின் நலன் கருதி, ஆணையம் இறுதி விடைகள் பதிவை பதிவேற்றம் செய்துள்ளது

    விண்ணப்ப தாரர்கள் வினாத்தாள் மற்றும் தங்களுக்குரிய இறுதி விடையை பிரிண்ட் அவுட் எடுக்கலாம். இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்

    அதாவது 16.08.2022 முதல் 15.09.2022 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.

    விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மைக்கேல் பாளையம், பிரம்மதேசம் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொகுப்பு நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்படி மானாவாரி நிலங்களில் உள்ள விவசாயிகளை பதிவு செய்து போர்வெல் அமைத்து வேளாண்மை தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் நுண்ணீர் பாசன வசதி செய்து கொடுத்து நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் இக்கிராமங்களில் செயல்படும் அனைத்து துறைகளில் மானியத் திட்டங்கள், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் கல் வரப்பு மற்றும் மண் பரப்பு போன்ற திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, துணை இயக்குனர்கள் அசோக், சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் பொறியியல் செயல் பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வட்டார வேளாண் அலுவலர் ஜெயக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூர்த்தி, செந்தில், பால–முருகன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது.

    சேலம்:

    இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள பொது மருத்துவ அலுவலர், கோட்ட உதவி மருத்துவ அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு -2022 அறிவிப்பு யு.பி.எஸ்.சி. கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அறிவித்தது. இதற்கான கல்வித் தகுதி எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும்.

    எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்ப–தாரர்கள் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வில் தேர்ச்சி பெற்றதும் எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரத்து செய்யப்படும்.

    சேலம், நாமக்கல்..

    இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் படித்து முடித்த டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர்.

    குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், கூடுதல் மருத்துவ கல்வி தகுதி பெற்ற டாக்டர்கள், மருத்துவ துறைகளில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வரும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்களை 04.05.2022 முதல் 10.05.2022 மாலை 6 மணி வரை திரும்ப பெற வாய்ப்பும் வழங்கப்பட்டது.

    அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்வு இந்த நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைத்துள்ளது. இதனால் இந்த 2 தேர்வு மையங்களிலும் தேர்வு நாளன்று டாக்டர்கள் கூட்டம் அதிக எண்ணக்கையில் இருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டுடன் ஒரு புகைப்பட அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் அல்லது மாநில, மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

    இந்த புகைப்பட அடையாள அட்டையின் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தபோது கொடுத்த தகவலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×