search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த  ஜவுளி வளாக பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு
    X

    ஒருங்கிணைந்த ஜவுளி வளாக பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு

    • பன்னீர்செல்வம் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.51 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்த பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் பணி முடியும் தருவாயில் உள்ளது. ரூ.51 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 292 கடைகள் வர உள்ளது.

    இதேப்போல் 153 நான்கு சக்கர வாகனங்களும், 263 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த இடம் வசதி உள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

    இங்கு துணி வாங்க வருபவர்கள் பஸ்சில் வந்து இறங்கி செல்வதற்கும், மீண்டும் துணிகளை வாங்கி திரும்பி செல்வதற்கும் சிரமம் இன்றி செல்லும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நமது மாவட்டத்தில் ஒவ்வொரு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் போது அது குறித்து முதல்-அமைச்சர் கேட்டு வருகிறார்.

    இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம்.

    இதில் சில சட்ட சிக்கல்கள் பிரச்சி னைகள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்ப டையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காரமடை அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து நானே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வேன். இதேபோல் பூந்துறை பகுதிகளிலும் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசி சுமுகமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×