search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வையிட்டு"

    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பகுத்தம்பாளையம், உப்புப்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் சத்தியமங்கலம் வட்டம், பகுத்தம்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு தோட்டக்கலை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இந்த பண்ணை 10 ஹெக்டேர் மொத்த பரப்பளவு கொண்டது. ஐந்தரை ஹெக்டேர் பரப்பளவில் மா, கொய்யா, மாதுளை பழ மரதாய் செடிகள் மற்றும் அடர்நடவு செய்யப்பட்டுள்ளன.

    எலுமிச்சை, நாவல் மாதிரி தோட்டங்களும், பசுமை குடில் சாகுபடி மற்றும் நிழல் வளை கூடாரங்களில் மா ஒட்டு செடிகள், பாக்கு நாற்றுகள், கொய்யாப் பதியன்கள், மாதுளை பதியன்கள், சீதா, எலுமிச்சை, புளி, நாவல், பப்பாளி, முருங்கை மர க்கன்றுகளும் பயிரிட ப்பட்டுள்ளதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பவானிசாகர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு ட்பட்ட தொப்பம்பாளையம் ஊராட்சி டோடாம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழுந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90.15 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கட்ட ப்பட்டுவருவதையும், பவானிசாகர் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் அமைக்க ப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை யும், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.520.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தலைமை நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மாதம்பாளையம் ஊராட்சி, மாதம்பாளையத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வங்கி நேரடி கடன் பெற்று சோப்பு, சேம்பு மற்றும் நாப்கின் ஆகிய பொருட்களை தயார் செய்யும் வேம்பு மகளிர் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள், மாதம்பாளையம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் மானாவாரி வேளாண்மை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.30,000 மானிய உதவியுடன் சுமார் 2.70 ஏக்கர் பரப்பள வில் ஒருங்கிணைந்த பண்ணை யம் அமைக்க ப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

    நொச்சிக்கோட்டை ஊராட்சி, நொச்சி க்கோட்டையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    நல்லூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைஉறுதிதி ட்டத்தின் கீழ் ரூ.23.35 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வருவதையும் மற்றும் அதே பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18.45 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் என பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் புன்செய் புளியம்பட்டி நகராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    • பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் குளம் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கியுள்ளது.
    • கலெக்டர் மகாபாரதி உத்தரவின்படி அரியாபிள்ளை குளம் தூர்வாரும்பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி, சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளைகுளம் அமைதுள்ளது.

    பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கியுள்ள இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் அழகுப்படுத்தி தூர்வாரி, நடைபாதை அமைத்திட அரசு மூலம் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.

    ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பால் பணி தடைப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின்படி மீண்டும் அரியாபிள்ளை குளம் தூர்வாரும்பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்ததது.

    இந்நிலையில் குளம் தூர்வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பணிகள் தடையின்றி மேற்கொள்ளவும், விரைந்து குளத்தினை அழகுப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

    ஆய்வின்பது நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பொறியாளர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை இணை ஆணையர் ஸ்ரீலேகா, மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், தெய்வானை, ஆகியோருடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தினார்.

    ×