search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு செய்த கலெக்டர்"

    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பகுத்தம்பாளையம், உப்புப்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் சத்தியமங்கலம் வட்டம், பகுத்தம்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு தோட்டக்கலை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இந்த பண்ணை 10 ஹெக்டேர் மொத்த பரப்பளவு கொண்டது. ஐந்தரை ஹெக்டேர் பரப்பளவில் மா, கொய்யா, மாதுளை பழ மரதாய் செடிகள் மற்றும் அடர்நடவு செய்யப்பட்டுள்ளன.

    எலுமிச்சை, நாவல் மாதிரி தோட்டங்களும், பசுமை குடில் சாகுபடி மற்றும் நிழல் வளை கூடாரங்களில் மா ஒட்டு செடிகள், பாக்கு நாற்றுகள், கொய்யாப் பதியன்கள், மாதுளை பதியன்கள், சீதா, எலுமிச்சை, புளி, நாவல், பப்பாளி, முருங்கை மர க்கன்றுகளும் பயிரிட ப்பட்டுள்ளதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பவானிசாகர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு ட்பட்ட தொப்பம்பாளையம் ஊராட்சி டோடாம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழுந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90.15 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கட்ட ப்பட்டுவருவதையும், பவானிசாகர் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் அமைக்க ப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை யும், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.520.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தலைமை நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மாதம்பாளையம் ஊராட்சி, மாதம்பாளையத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வங்கி நேரடி கடன் பெற்று சோப்பு, சேம்பு மற்றும் நாப்கின் ஆகிய பொருட்களை தயார் செய்யும் வேம்பு மகளிர் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள், மாதம்பாளையம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் மானாவாரி வேளாண்மை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.30,000 மானிய உதவியுடன் சுமார் 2.70 ஏக்கர் பரப்பள வில் ஒருங்கிணைந்த பண்ணை யம் அமைக்க ப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

    நொச்சிக்கோட்டை ஊராட்சி, நொச்சி க்கோட்டையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    நல்லூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைஉறுதிதி ட்டத்தின் கீழ் ரூ.23.35 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வருவதையும் மற்றும் அதே பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18.45 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் என பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் புன்செய் புளியம்பட்டி நகராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    விளாங்கோம்பை மலைவாழ் கிராமத்தை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அலு வலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி டி.என்.பாளை யம் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கொங்கர்பா ளையம் ஊராட்சி பழங்குடி யினர் வாழும் விளாங்கோ ம்பை மலைவாழ் கிராமத்தை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, வனத்துறை, கல்வி த்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலு வலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விளாங்கோம்பை பகுதி யில் சுமார் 47 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பட்டா பெற்ற 36 குடும்பத்தினருக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீ ட்டில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு உள்ளது.

    இப்பகுதியில் உள்ள 31 மாணவ, மாணவிகளில் 21 பேர் வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியிலும், 10 பேர் கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யிலும் பயின்று வருகின்ற னர். மேலும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எளிதில் சென்று வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இங்குள்ள பொது மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பில் கல்கரை அமைத்தல் மற்றும் குட்டை சீரமைத்தல் பணிகளோடு வேளாண்மை - உழவர் நல த்துறை, தோட்டக்கலை த்துறை, வேளாண் பொறி யியல் துறை சார்பில் மக்கா ச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்காக மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் ரேசன் பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு நேரடி யாக விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றன.

    மேலும், பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று க்கொண்ட கலெக்டர் அவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம், பள்ளி கட்டிட ங்கள் அமைத்தல், வேளாண் பயன்பாட்டி ற்கான ஆழ்து ளை கிணறு மற்றும் அகழிக்கு ழிகள் கூடுதலாக அமைத்து தருதல் உள்ளிட்ட கோரிக்கை களை முழுமை யாக நிறை வேற்றிட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளி ட்ட சான்றிதழ்களை விரை ந்து வழங்கிடவும் மற்றும் ஆதார் சேவையை அளித்தி டவும் கோபி செட்டி பாளையம் தாசி ல்தாரு க்கு கலெக்டர் உத்தர விட்டார்.தொடர்ந்து கலெக்டர் விளாங்கோம்பை பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கொங்க ர்பா ளையம் ஆதிதிராவிடர் காலனியில் தொகுப்பு வீடுகள் கட்ட ப்பட்டு வரும் பணி, கொங்க ர்பாளையம் பகுதி விவசாயி சக்திவேல் முத்துசாமி சுமார் 1.44 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,88,023 அரசு மானி யத்துடன் மக்காச்சோளம் பயிரிட ப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு பயிரி டும் முறைகள் குறித்தும் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், டி.என்பாளை யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, சாந்தி, கோபிசெட்டி பாளை யம் தாசில்தார் ருத்திரசாமி, வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தொங்கும் சூரிய மின்வேலியை கலெக்டர் சாந்தி பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.
    • ஈச்சம்பள்ளி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வனம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. ஒகேனக்கல் பென்னாகரம் பாலக்கோடு உள்ளிட்ட வனப்பகுதிகள் யானைகள் அதிகமாக வசிக்கிறது. கோடைகாலங்களில் உணவு தண்ணீர் தேடி வானத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானை, காட்டு பன்றிகள், எலிகள் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பாலக்கோடு வட்டம் பேவுஅள்ளி பஞ்சாயத்து ஈச்சம்பள்ளம் பகுதியில் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஒதுக்கிய நிதியிலிருந்து உடனடியாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.16 லட்சம் மதிப்பில் தொங்கும் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டு பணிகள் முடிந்ததை அடுத்து பேவுஅள்ளிபஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் மற்றும் ஊர் கவுண்டர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முதல் சூரிய மின்வெளி செயல்பட தொடங்கியது.

    இந்த நிலையில் பேவுஅள்ளி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி வந்தார். அப்போது அவர் ஈச்சம்பள்ளி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள தொங்கும் சூரிய மின்வேலியை கலெக்டர் சாந்தி பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பாலக்கோடு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருவதாக பலமுறை என்னிடம் ஈச்சம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனு கொடுத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த சோலார் ஹாக்கிங் மின்வேலி அமைக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்தோம். இந்த நிலையில் இந்த மின்வேலி ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்வேலி அருகே வனவிலங்குகள் ஏதும் வந்தால் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொட்டால் ஒருமுறை மட்டும் குறைந்த அளவிலான மின்சாரம் பாய்ந்து எச்சரிக்கை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு வராமல் தடுக்கப்படுகிறது. மேலும், இந்த மின்வேலியால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஈச்சம்பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட வனஅலுவலர் அப்பலோநாயுடு, பாலக்கோடு வனத்துறை அதிகாரி நடராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    • ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
    • சமதர்மபுரம் ரேசன் கடை மற்றும் ஊஞ்சாம்பட்டி மகளிர் ரேசன் கடை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    தேனி:

    தேனி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22 கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்பணை அமைத்தல் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2021-22 கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டுமானப்பணி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) 2021-22, கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2019-20 கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் அம்மாபுரம் அங்கன்வாடி தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22 கீழ் ரூ.7.70 லட்சம் மதிப்பீட்டில் முத்தைய கோவில் தெரு ஓடையில் பாலம் அமைத்தல் பணி,

    கிராமப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2021-22 கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் கருவேல்நாயக்கன்பட்டி சாலை முதல் பின்னத்தேவன்பட்டி சாலை வரை தார்சாலை அமைக்கப்பட்ட பணி ஆகிய பணிகளையும் ஆய்வு செய்து விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமதர்மபுரம் ரேசன் கடை மற்றும் ஊஞ்சாம்பட்டி மகளிர் ரேசன் கடை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு, ஜூலை. 6-

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெருந்துறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்புகளுக்கு வழங்கும் பணி, பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதியில் மூல தன நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி மற்றும் பெருந்துறை அக்ரகார வீதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பொது அறிவு சார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் துடுப்பதி ஊராட்சியில் செயல்படுத்த ப்பட்டு வரும் 21 விவசாயிகளின் 17.15 ஏக்கர் தரிசு நிலங்களை கலெக்டர் பார்வையிட்டு திட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஆயிகவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் புதியகு ளம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து குள்ளம்பாளையம் அடுத்த மேட்டு ப்பாளையம் பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ரூ.4.68 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் உறிஞ்சி குழி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்,

    ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக கலெக்டர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறு கால அறுவை சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு ரத்த பரிசோதனை மையம் மருத்துவகிடங்கு மையம் மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முக வடிவு, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பெருந்துறை வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×