search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector who inspected"

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.18 லட்சம் மதிப்பில் மந்தை ஊரணி வரத்துக் கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், சமத்துவ புரத்தில் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வரத்துக் கால்வா யில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை யும் கலெக்டர் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பந்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.25 லட்சம் வகுப்பறை புனரமைக்கப்பட்ட பணி களையும், ஜோகில்பட்டி ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.02 லட்சம் மதிப்பில் திருச்சி - தூத்துக்குடி சாலை முதல் கனக்கனேந்தல் - கரியனேந்தல் சாலை மேம்படுத்தும் பணிகளை யும் ஆய்வு செய்தார்.

    வக்கனாங்குண்டு ஊராட்சியில் முதலமைச்ச ரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.157.30 லட்சம் மதிப்பில் கரியனேந்தல்- சித்துமூன்றடைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருதையும், டி.வேப்பங் குளம் ஊராட்சியில் ரூ.1.96 லட்சம் மதிப்பில் சிறிய சுகாதார வளாகம் கட்டப்பட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.45 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரை வாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • சிவகாசி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல்கூடம் கட்டப்பட்டு வருவதையும், காரிசேரி கிராமத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் மேலஆமத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பில் சேர்வைக்காரன்பட்டி கண்மாய் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.31.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப் பறை கட்டிடங்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு, ஜூலை. 6-

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெருந்துறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்புகளுக்கு வழங்கும் பணி, பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதியில் மூல தன நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி மற்றும் பெருந்துறை அக்ரகார வீதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பொது அறிவு சார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் துடுப்பதி ஊராட்சியில் செயல்படுத்த ப்பட்டு வரும் 21 விவசாயிகளின் 17.15 ஏக்கர் தரிசு நிலங்களை கலெக்டர் பார்வையிட்டு திட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஆயிகவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் புதியகு ளம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து குள்ளம்பாளையம் அடுத்த மேட்டு ப்பாளையம் பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ரூ.4.68 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் உறிஞ்சி குழி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்,

    ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக கலெக்டர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறு கால அறுவை சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு ரத்த பரிசோதனை மையம் மருத்துவகிடங்கு மையம் மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முக வடிவு, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பெருந்துறை வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×