search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    சிவகாசி அருகே காரிசேரி கிராமத்தில் மத்திய சேனை நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • சிவகாசி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல்கூடம் கட்டப்பட்டு வருவதையும், காரிசேரி கிராமத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் மேலஆமத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பில் சேர்வைக்காரன்பட்டி கண்மாய் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.31.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப் பறை கட்டிடங்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×