search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vlancombe"

    விளாங்கோம்பை மலைவாழ் கிராமத்தை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அலு வலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி டி.என்.பாளை யம் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கொங்கர்பா ளையம் ஊராட்சி பழங்குடி யினர் வாழும் விளாங்கோ ம்பை மலைவாழ் கிராமத்தை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, வனத்துறை, கல்வி த்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலு வலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விளாங்கோம்பை பகுதி யில் சுமார் 47 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பட்டா பெற்ற 36 குடும்பத்தினருக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீ ட்டில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு உள்ளது.

    இப்பகுதியில் உள்ள 31 மாணவ, மாணவிகளில் 21 பேர் வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியிலும், 10 பேர் கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யிலும் பயின்று வருகின்ற னர். மேலும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எளிதில் சென்று வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இங்குள்ள பொது மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பில் கல்கரை அமைத்தல் மற்றும் குட்டை சீரமைத்தல் பணிகளோடு வேளாண்மை - உழவர் நல த்துறை, தோட்டக்கலை த்துறை, வேளாண் பொறி யியல் துறை சார்பில் மக்கா ச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்காக மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் ரேசன் பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு நேரடி யாக விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றன.

    மேலும், பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று க்கொண்ட கலெக்டர் அவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம், பள்ளி கட்டிட ங்கள் அமைத்தல், வேளாண் பயன்பாட்டி ற்கான ஆழ்து ளை கிணறு மற்றும் அகழிக்கு ழிகள் கூடுதலாக அமைத்து தருதல் உள்ளிட்ட கோரிக்கை களை முழுமை யாக நிறை வேற்றிட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளி ட்ட சான்றிதழ்களை விரை ந்து வழங்கிடவும் மற்றும் ஆதார் சேவையை அளித்தி டவும் கோபி செட்டி பாளையம் தாசி ல்தாரு க்கு கலெக்டர் உத்தர விட்டார்.தொடர்ந்து கலெக்டர் விளாங்கோம்பை பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கொங்க ர்பா ளையம் ஆதிதிராவிடர் காலனியில் தொகுப்பு வீடுகள் கட்ட ப்பட்டு வரும் பணி, கொங்க ர்பாளையம் பகுதி விவசாயி சக்திவேல் முத்துசாமி சுமார் 1.44 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,88,023 அரசு மானி யத்துடன் மக்காச்சோளம் பயிரிட ப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு பயிரி டும் முறைகள் குறித்தும் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், டி.என்பாளை யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, சாந்தி, கோபிசெட்டி பாளை யம் தாசில்தார் ருத்திரசாமி, வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×