search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழிஅரியாபிள்ளை குளம் தூர்வாரும் பணி
    X

    சீர்காழி அரியாபிள்ளை குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    சீர்காழிஅரியாபிள்ளை குளம் தூர்வாரும் பணி

    • பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் குளம் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கியுள்ளது.
    • கலெக்டர் மகாபாரதி உத்தரவின்படி அரியாபிள்ளை குளம் தூர்வாரும்பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி, சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளைகுளம் அமைதுள்ளது.

    பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கியுள்ள இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் அழகுப்படுத்தி தூர்வாரி, நடைபாதை அமைத்திட அரசு மூலம் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.

    ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பால் பணி தடைப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின்படி மீண்டும் அரியாபிள்ளை குளம் தூர்வாரும்பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்ததது.

    இந்நிலையில் குளம் தூர்வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பணிகள் தடையின்றி மேற்கொள்ளவும், விரைந்து குளத்தினை அழகுப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

    ஆய்வின்பது நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பொறியாளர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை இணை ஆணையர் ஸ்ரீலேகா, மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், தெய்வானை, ஆகியோருடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தினார்.

    Next Story
    ×