search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மேலாண்மைக்குழு"

    • சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறு வளமையங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
    • இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜ் நகர் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வளமையங்களில் உள்ள அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.

    பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் திறம்பட செயல்படுதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் போது பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், இலவச கட்டா யக்கல்வி உரிமைச்சட்டம் 2009, குழந்தையின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களின் பணிகளை அறிய செய்தல், பாலினப் பிரச்சனைகள், தரமான கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை, பள்ளி களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தம், உள்கட்ட மைப்பு பராமரிப்பு பணிகள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய செயல்பாடுகள் பற்றி கருத்தாய்வு நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 71 அரசு பள்ளியில் உள்ள உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபிநாதன், நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    இப்பயிற்ச்சியானது சிறப்பாக நடைபெறுவதை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சோலைத்தங்கம் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    • மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • எண்ணும் எழுத்தும் கற்றல் முறை என பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் தோறும் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டு, எண்ணும் எழுத்தும், கலை மற்றும் கலாசாரம், நூலகம் மற்றும் வாசிப்பு, நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வி ஆலோசிக்கப்படுகிறது.

    உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள், மதிப்பீடுகள் மற்றும் வினாடி வினா, நூலகம் மற்றும் வாசிப்புத்திறன், கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு ஆகிய கருப்பொருளை மையப்படுத்தி விவாதிக்கப்படுகிறது.அவ்வகையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    விருகல்பட்டி ஊராட்சிப்பள்ளி ஆசிரியர் ஜவகர், உயர்கல்வி சார்ந்த விபரங்களை விரிவாக பேசினார். ஆசிரியர்கள் ஜோதிமணி, பாலகிருஷ்ணன், தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் ஜெனட்ரோஸிலின், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    கூட்டத்தில், போதைப்பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல், மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உயர் கல்வி வேலை வாய்ப்பு குறித்து சரவணன் பேசினார். மாணவி ஜனனி நன்றி கூறினார்.

    சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர் சரவணன் பயிற்சி குறித்து பேசினார். வட்டார வளமைய ஆசிரியர் பிரபாகரன், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.தொடர்ந்து ஆர்.டி.ஐ., சட்டம், அரசின் நலத்திட்டம், மத்திய மாநில அரசின் உதவித்தொகை, பள்ளி மேம்பாட்டு திட்டம், எண்ணும் எழுத்தும் கற்றல் முறை என பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.

    மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி, கனகராஜ், சடையப்பன் ஆறுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு குழுத்தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் சித்ரா, குழு உறுப்பினர்கள் கனகராஜ், பாலசுப்ரமணியன், காயத்ரி, தனலட்சுமி, சரோஜினி மற்றும் தலைமையாசிரியை கவுரி, உமாமகேஸ்வரன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    • பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு கூட்டத்தில் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் சான்றிதழ்களை வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு கூட்டத்தில் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

    பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள் 15 பேர், தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் 2 பேர் மற்றும் கல்வி தன்னார்வலர் ஒருவர் என மொத்தம் 20 உறுப்பினர்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

    கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி பள்ளி மேலாண்மைக்குழுவானது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 200 அரசு நடுநிலைப்பள்ளிகள், 948 அரசு தொடக்கப்பள்ளிகளில் 3 கட்டமாக பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு முடிவடைந்து, தற்போது 4வது கட்டமாக 169 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தவும் பெற்றோர்களின் பங்களிப்பு அவசியமானது. எனவே பள்ளி மேலாண்மைக்குழுவில் 10 பெண்கள் கட்டாயம் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

    பள்ளி மேலாண்மைக்குழு, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றலை குறைத்தல், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து முறையாக பள்ளிக்கு வரவழைத்து சேர்த்தல், மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் வளங்களை அதிக அளவில் பயன்படுத்தல், கல்வி வளர்ச்சிக்காக பிற துறைகளை ஒருங்கிணைத்தல், இல்லம் தேடி கல்வி மையங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஆசிரியர் பணி என்பது புனிதமானது. மாணவ, மாணவிகளுக்கு இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்கள்தான். தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் கல்வி சேவையாற்ற வேண்டும்.

    மாணவ, மாணவிகளின் தனித்திறமை, அவர்களின் சூழ்நிலை ஆகியவற்றை அறிந்து அவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×