search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training of"

    • ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூறப்பட்டது.

    கோபி:

    தமிழக அரசு பொறு ப்பேற்றதும் மகளிருக்கான மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க ப்போவதாக அறிவித்தது. இந்த உரிமைத்தொகையை ரேசன் கடை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த படிவங்கள் உரிய முறையில் உண்மையான பயனாளி களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடை பணியா ளர்களுக்கும் இது தொட ர்பாக ஆலோசனையும், பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கோபி கோட்டத்தில் உள்ள கோபி, நம்பியூர், சத்திய மங்கலம், தாளவாடி, அந்தி யூர் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் முழுநேர மற்றும் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் 670 ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப திவாளர் ராஜ்குமார் தலைமையில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நர்மதா முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி வகுப்பில் பொது விநியோக திட்ட பதிவாளர் கந்தசாமி, கூட்டு றவு சார்பதிவாளரும், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனருமான சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்பில், கோபி, அந்தியூர், நம்பியூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி ஆகிய 6 தாலுகாவில் உள்ள 680 ரேசன் கடைகளில் பணியாற்றும் 468 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் படிவங்களை வழங்குதல், நாள் தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் 160 பேருக்கு மட்டும் படிவம் வழங்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூற ப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோபி குடிமை பொருள் தாசில்தார் கார்த்திக், கோபி வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கு களப்பயிற்சி வழங்கப்பட்டது.
    • தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கான களப்பயிற்சி வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதியில் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது. இதனால் விவசாயி கள் நிலக்கடலை மற்றும் எள் பயிரிட்டுள்ளனர்.

    நிலக்கடலை பயிரில் ஜி.ஜே.ஜி.9, பி.எஸ்.ஆர்.2, தரணி ஆகிய ரகங்களின் ஆதார நிலை–1 விதை ப்பண்ணை காஞ்சிகோவில் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ளது.

    இப்பண்ணைகளை விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

    பின்னர் நிலக்கடலை ரகங்களின் மகசூல் திறன், குணாதி சயங்கள், வயலாய்வு மேற்கொள்ளும் நடை முறைகள், கலவன்களை கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறை குறித்து விதைச்சான்று அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் நிலக்கடலை பயிர் உற்பத்தி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறு வளமையங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
    • இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜ் நகர் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வளமையங்களில் உள்ள அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.

    பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் திறம்பட செயல்படுதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் போது பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், இலவச கட்டா யக்கல்வி உரிமைச்சட்டம் 2009, குழந்தையின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களின் பணிகளை அறிய செய்தல், பாலினப் பிரச்சனைகள், தரமான கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை, பள்ளி களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தம், உள்கட்ட மைப்பு பராமரிப்பு பணிகள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய செயல்பாடுகள் பற்றி கருத்தாய்வு நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 71 அரசு பள்ளியில் உள்ள உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபிநாதன், நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    இப்பயிற்ச்சியானது சிறப்பாக நடைபெறுவதை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சோலைத்தங்கம் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    ×