search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர்களுக்கு"

    • சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறு வளமையங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
    • இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜ் நகர் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வளமையங்களில் உள்ள அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.

    பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் திறம்பட செயல்படுதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் போது பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், இலவச கட்டா யக்கல்வி உரிமைச்சட்டம் 2009, குழந்தையின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களின் பணிகளை அறிய செய்தல், பாலினப் பிரச்சனைகள், தரமான கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை, பள்ளி களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தம், உள்கட்ட மைப்பு பராமரிப்பு பணிகள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய செயல்பாடுகள் பற்றி கருத்தாய்வு நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 71 அரசு பள்ளியில் உள்ள உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபிநாதன், நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    இப்பயிற்ச்சியானது சிறப்பாக நடைபெறுவதை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சோலைத்தங்கம் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    ×