search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராமரிப்பு பணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சென்னையில் நாளை தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அண்ணாநகர் பகுதியில் எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (30-ந் தேதி) தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லப்பாக்கம் மெயின் ரோடு, செல்லி நகர், சுந்தரம் காலனி, எழில் நகர், கம்பர் தெரு, 100 அடி ரோடு, அண்ணா தெரு, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், சந்தான லட்சுமி தெரு, ஆதி லட்சுமி தெரு, விஜயலட்சுமி தெரு, அன்னை நகர் மற்றும் சவுபாக்கிய லட்சுமி தெரு, ராதாநகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர் மற்றும் கண்ணம்மாள் நகர்.

    அண்ணாநகர் பகுதியில் மதுரவாயல், கிருஷ்ணாநகர், ருக்மணி நகர், பாரதி நகர், எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று காலை தொடங்கியது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம், பருவக்குடி வழியாக ராஜபாளையம் பிரதானசாலையில் செல்லும். அதேபோல் ராஜபாளையம், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி வந்து அங்கிருந்து அச்சம்பட்டி சாலை சென்று வேல்ஸ் மெட்ரிக் பள்ளி, வடக்குப்புதூர் வழியாக பஸ் நிலையம் வந்து செல்லும். மாலை 6 மணிக்கு மேல் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும். எனவே பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
    • செயற்பொறியாளர்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம். சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்ப டுகிறது.

    அதேபோல வடுகந்தாங்கல் பகுதியிலும் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய அற்புதராஜ், பரிமளா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது.
    • நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    சென்னை - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில், இருமார்க்கத்திலும் வருகிற 8-ந்தேதி வரை தாமதமாக பயணத்தை துவங்கும் என, சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது. இதனால், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638) இரவு 11.45 மணிக்கு பதிலாக 2 மணி நேரம், 50 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.35 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும். இதேபோல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து மங்களூருக்கு புறப்படும் ெரயில் (எண்: 22637) மதியம், 1.25 மணிக்கு பதில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்கு புறப்படும். வருகிற 5, 6, 8-ந்தேதிகளில் ெரயில் இயக்கம் தாமதமாகும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு அட்டவணையில் உள்ள நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டுகோள்
    • ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - ஓச்சேரி பிரதான சாலையில் மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரக்கோணம் - காஞ்சீபுரம் ரெயில் மார்கத்தின் ரெயில்வே கேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே, அத்தியாவசிய தேவைக்கு பொது மக்கள் மற்றும் வாகனங் களில் செல்வோர் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களின் இரவில் ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்த்து பருத் திபுத்தூர் வழியாககும்பினிபேட்டை செல்லும் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரக்கோணம் தாசில் தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மின்விநி யோகம் இருக்காது.

    கடலூர்:

    பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்தி ரன் வெளியீட்டு விழா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பண்ருட்டி பூங்குணம் துணை மின் நிலையத்தில் வரும் (12-ந் தேதி) வியாழ க்கிழமை அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெ றஉள்ளதால் அன்றுகாலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதனால், அங்குசெட்டிப்பாளையம். சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலூர், கண்டர க்கோட்டை, கனி சப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம், பக்கிரிப்பாளையம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஏரிப்பா ளையம், தட்டா ம்பாளையம், மாளிகை மேடு, புதுப்பே ட்டை, பண்டரக்கோட்டை, கொண்டா ரெட்டிப் பாளையம், வவுசி நகர், ஆர்.எஸ்.மணி நகர், பாரதி நகர், ெரயில்வே காலனி, சாமியார் தர்கா மற்றும் புதுநகர் ஆகிய ஊர்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராம ங்களு க்கும் அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மின்விநி யோகம் இருக்காது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்

    • கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    • ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்-விஜயவாடா, சென்ட்ரல்-அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    • திருமக்கோட்டை நாளை மின்பாராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம்,

    வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வட சிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய செயற் பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • சமயநல்லூர், அலங்காநல்லூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, அலங்கா நல்லூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவ சேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந் தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்த மங்கலம், உசிலம்பட்டி, முடு வார்பட்டி. குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடுநகர் பகுதிகள்.மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர்

    சர்க்கரை ஆலையம் அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண் டம்பட்டி, சிறுவாலை, சின்ன கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்ன னம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள். சமயநல்லூர், ஊர் மெச்சிக்குளம், வளர்நகர், பாத்தி மாநகர், தேனூர்ரோடு அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.இந்த தகவலை சமயநல்லூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    ×