search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின் நிறுத்தம்
    X

    கோப்புப்படம்

    நாளை மின் நிறுத்தம்

    • பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
    • செயற்பொறியாளர்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம். சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்ப டுகிறது.

    அதேபோல வடுகந்தாங்கல் பகுதியிலும் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய அற்புதராஜ், பரிமளா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×