search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி முகாம்"

    • 40 பள்ளிகளில் இருந்து 160 ஆசிரியர்கள் பங்கேற்பு
    • அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியாக கற்றலை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி, நெல்லை, தூத்துக் குடி, சி.பி.எஸ்.இ பள்ளி களின் கூட்டமைப்பான தக்க்ஷின் சஹோதயா தென்மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிலரங்கத்தை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தியது. பள்ளியின் நிறு வனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கினார். வின்ஸ் பள்ளி முதல்வர்டாக்டர் பீட்டர் ஆண்டனி சுரேஷ் வர வேற்றுப் பேசினார். டாக்டர் பினு மோன் பயிற்சியாளரை அறிமுகப்ப டுத்தி திருவனந்தபுரம் சிறப்பு பயிற்சியாளர் டாக்டர் பிஜுதாமஸ் பயிற்சியளித்தார்.

    தொடக்க நிலை மாணவ - மாணவியரின் அறிவுத்திறனை மெருகூட்டும் வகையில் கற்பித்தலை மேற்கொள்வது, மதிப்பீட்டு வழிமுறை, கல்வி தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையை அனைத்து கோணங்களிலும் ஆசிரியர்களுக்கு விழிப்பு ணர்வுடன் கூட அதனை செயல்படுத்தும் வழிமுறை களும் இந்த பயிலரங்கத்தில் கற்பிக்கப்பட்டது. குழந்தை களுக்கு எளியமுறையில் ஆடிப்பாடி கற்பிப்பது குறித்து பல்வேறு குழு விளையாட்டுகள் பாடல்கள் நடனங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியாக பயிலரங்கத்தில் கற்றலை மேற்கொண்டனர்.

    சி.பி.எஸ்.இ. பள்ளி தொடக்க நிலைஆசிரியர்க ளுக்கு இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்றவாற அனுபவ வழிகற்றல் மற்றும் கற்பித்தல் கலைகளை மேம்படுத்தும் வகையில் இந்த இருநாள் திறன் வளர் பயிற்சி முகாம் நடை பெற்றது.

    பயிற்சியினை வின்ஸ் பள்ளியின் செய லாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் மற்றும் கூட்ட மைப்பின் செயலாளர் டாக்டர் ஸ்ஓஹரா குஸைன் ஒருங்கிணைத்திருந்தனர். தக்க்ஷின் சஹோதயா கூட்டமைப்பின் பொரு ளாளர் மஞ்சு ராஜேஷ் நன்றி உரையாற்றினார். வின்ஸ் சி.பி.எஸ்.இ. ஆசிரியர் ஜெகன் பிரிட்டோ நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட 160 ஆசிரியர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை, தொடக்கநிலை), முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலை, உயா்நிலை), உதவி திட்ட அலுவலா்-1, உதவி திட்ட அலுவலா்-2, பள்ளி துணை ஆய்வாளா்கள், அரசு மேல்நிலை, உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

    நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அவா்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்கினா்.

    குறிப்பாக, பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை எவ்வாறு பாா்வையிடுவது, ஆசிரியா்கள், மாணவா்களின் கலந்துரையாடலை பாா்வையிட்டு தகவல்கள் சேகரிப்பது, தகவல்களின் உண்மைத் தன்மை, அதன் முக்கியத்துவம், பள்ளிப் பாா்வை செயலியில் பதிவிடுவது போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

    இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் முருகன், மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் சக்திவேல், நாமக்கல் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ரவிக்குமாா், பள்ளி துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்பட 268 போ் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • பயிற்சி முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கி ணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணி மேகலை, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மிஷன் இயற்கை கல்வி அலுவலர் சுமிக்ஷா, பசுமைத் தோழர் பிருந்தா, சமூக வன விரிவாக்க அலுவலர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி அலுவலர் வினோதினி மறறும் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில், தற்போதைய சூழ்நிலையில் காடுகள் சுருங்கி வருவது குறித்தும், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு நல்ல உகந்த சூழ்நிலைக்கான பூமிமை விட்டுச்செல்வது நமது தலையாய கடமை என்றும், ஒவ்வொரு நாளும் பிளாஸ் டிக் பைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ் சப்பை பயன்பாடு குறித்து எடுத்து கூறினார்.

    பயிற்சியின் முடிவில், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கணைப்பாளர்களுக்கு கிருஷ்ணகிரி தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பாக மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பயிற்சியினை பள்ளி யின் தலைமையாசிரியர் மகேந்திரன் ஒருங்கிணைத் தார். பயிற்சிக்கான ஏற் பாடுகளை கிருஷ்ண கிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி மகேந்திரன், ஓசூர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற்பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
    • பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் செந்தில் ஆறுமுகம் விளக்கி கூறினார்.

    சங்கரன்கோவில்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்ட அளவில் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு மின்பகிர்மானத்தில் பாது காப்புடன் பணிபுரிவது பற்றிய பயிற்சி வகுப்பு சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய ஆலோசனைகள் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற் பொறி யாளர்கள், உதவி பொறி யாளர்கள் மற்றும் கள ப்பணி யாளர்கள் கலந்து கொண்டனர். நெல்லை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாடு பிரிவு ஏற்பாட்டின் பேரில், நெல்லை மண்டல பாது காப்பு அதிகாரி செந்தில் ஆறுமுகம் பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறினார். நிலை இணைப்பு செய்ய வேண்டிய அவசியம், கையுறை பயன்படுத்த வேண்டிய அவசியம், இடுப்பு கயிறு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்கி கூறினார். பணிகளின் போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அப்பொழுது தான் சிந்தனை சிதறல் இல்லாமல் பணி புரிய முடியும் என்றார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை நகர் புறம் I பிரிவு உதவி மின் பொறியாளர் கருப்பசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டாரம் கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார். கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று) சித்திரைச்செல்வி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக சான்று பெறுவதற்கான முறைகள், உழவர் தொகுப்பு உருவாக்குதல், இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், ஆகியவற்றை குறித்து விளக்கினார். திருச்சி சிறுகமணி பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் தென்னையில் ஏற்படும் நோய்கள், பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உயிரி உரத்தின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார். கபிலர்மலை வேளாண் உதவி இயக்குநர் ராதாமணி அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதன் பயன்கள் பற்றி விரிவாக விவரித்தார். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நிஷா ஆகியோர் செய்திருந்தனர். 

    • கள்ளிக்குடியில் பாதுகாப்பான குடிநீர் குறித்த விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
    • உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை பரிசோதனை செய்து, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

    கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளை சார்ந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் செந்தில் குமரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் கலந்து கொண்டனர்.

    மெர்குரி மகளிர் குழுவைச் சார்ந்த அன்புச்செல்வி, வாசுகி உட்பட மகளிர் குழுவினர் ஏராளமான கலந்து கொண்டு விளக்க பயிற்சியை அளித்தனர்.இதில் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர்கள் தங்களுடைய சந்தேகத்திற்கு இடமான கேள்விகளை அதிகாரிகளிடம் அறிந்து கொண்டனர்.

    ஆங்காங்கே ரசாயன கலந்த (R.0) விற்பனை செய்வதை அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை குறித்தும் பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கிராமங்களில் கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் அதன் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைப்பது குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டன.

    • ஜல்ஜீவன் மிஷன் பயிற்சி முகாம் நடந்தது.
    • மாநில ஊரக விரிவாக்க பயிற்றுநர் சந்திரமோகன் பயிற்சி அளித்தார்.

    கொடுமுடி:

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி செயலர்,

    கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு, பாணி சமிதி குழுவினருக் கான ஜல்ஜீவன் மிஷன் 2023-2024-க்கான பயிற்சி முகாம் நடந்தது.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். கொடு முடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பவானிசாகர் அரசு பயிற்சி நிறுவனத்தின் மாநில ஊரக விரிவாக்க பயிற்றுநர் சந்திரமோகன் பயிற்சி அளித்தார்.

    • காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடந்தது.
    • கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்கள் படித்து பயன்பெரும் வண் ணம் தன்னார்வ பயிலகம் இயங்கி வருகிறது.

    இத்தன்னார்வ பயிலகத் தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவ லர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 3,359 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு விண்ணப் பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். இதற் கான தேர்வுகட்டணம் ரூ.250 ஆகும்.

    இப்போட்டி த்தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலா கவும் அல்லது 7867080168 என்ற அலைபேசியின் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    பெங்களூரு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். அயர்லாந்து தொடரில் ஆடிய ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, மாற்று வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று பயிற்சி முகாமில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முகாமில் பேட்டிங், பந்து வீச்சு பயிற்சி மட்டுமின்றி உடல்தகுதி விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக யோ-யோ சோதனையும் நடத்தப்படுகிறது. யோ-யோ சோதனை என்பது குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக ஓடி கடக்க வேண்டும். இதில் 16.5 புள்ளியை கடந்தால் தான் வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்குரிய அளவுகோலாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்துள்ளது. முதல் நாளில் கோலி யோ-யோ சோதனையில் 17.2 புள்ளிகள் எடுத்து அசத்தினார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

    ரோகித், பாண்டயா, ஆகியோரும் இந்த கடுமையான சோதனையை வெற்றிகரமாக முடித்தனர். மறுபடியும் லேசான காயமடைந்துள்ள லோகேஷ் ராகுல் மற்ற பயிற்சியில் ஈடுபட்டாரே தவிர, யோ-யோ சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. அவரது உடல்தகுதி எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

    இந்த பயிற்சி முகாம் வருகிற 29-ந்தேதி நிறைவடைகிறது. மறுநாள் அங்கிருந்து வீரர்கள் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்கள். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை செப்.2-ந்தேதி சந்திக்கிறது.

    • ரெகுநாதபுரம் ஊராட்சியில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் முகாமை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் இந்திய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காரைக்கால் நிறுவ னம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான திறன் வளர்ப்பு திட்டம் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். ஓ.என்.ஜி.சி மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல், 2 கிராமங்களுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் ரவிக்குமார், விஜயகண்ணன், தங்கமணி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (ரெகுநாதபுரம்), முத்தமிழ் செல்வி பூர்ணவேல் (வாலாந்தரவை), மண்டபம் வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    • விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது.
    • தொழில்நுட்ப அலுவலர்களுக்கு கடந்த 18-ந்தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் பூதலூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை அளவிலான வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது.

    இத்திட்டத்தின் செயல்பாடுகளை வேளாண்மை உற்பத்தி ஆணையர்/ அரசு செயலர் மற்றும் இயக்குநர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினரின் அறிவுரையின்படி வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களும் தெரிந்து கொண்டு விவசாயிகளுக்கு உதவிட ஏதுவாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு கடந்த 18-ந்தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சிக்கு வேளாண்மை துனண இயக்குநர்(மத்திய திட்டங்கள்) ஈஸ்வர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) கோமதி தங்கம், வேளாண்மை துனண இயக்குநர்(உழவர் பயிற்சி நிலையம்) பால சரஸ்வதி வேளாண்மை துணை இயக்குநர் ( வேளாண் வணிகம்) வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை துனண இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மின்னணு வேளாண் சந்தை மாநில ஒருங்கினணப்பாளர் திரு. பிரேம் குமார் இத்திட்டத்தின் செயல்பாடுகளான விவசாயிகள் தரவுகளை பதிவேற்றம் செய்தல், வணிகர்களுக்கான உரிமம், ஏல முறை மற்றும் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை குறித்து பயிற்சி அளித்தார்.

    • பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிச்சாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து மற்றும் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவினா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×