search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணாரியம்மன்"

    • முதல் தினமும் கம்பம் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • பண்ணாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து குவிந்துள்ளனர்.

    சத்தியமங்கலம், 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாா கடந்த 20-ந்தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது.

    தொடர்ந்து பண்ணாரியம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுபுற கிராமங்களுக்கு ஊர்வலமாக சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வலம் வந்த சப்பரம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து கம்பம் சாட்டப்பட்டது. அன்று முதல் தினமும் கம்பம் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.

    விழாவின் முக்கிய திருவிழாவான குண்டம் இறங்கும் விழா நாளை அதிகாலை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு குண்டம் இறங்க தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

    இதற்காக மலைபோல் விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு குண்டம் ஏற்றப்படும். தொடர்ந்து விடிய, விடிய குண்டம் எரியூட்டப்பட்டு அதிகாலையில் குண்டம் இறங்கும் விழா நடைபெறும்.

    இதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி வழிபடுவார்கள்.

    இந்த குண்டம் விழாவில் பங்கேற்க கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, கூட்டு வண்டி, ரேக்ளா வண்டிகளில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து குவிந்துள்ளனர்.

    அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால் பண்ணாரியம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறையினரும் வனவிலங்குகள் கோவில் அருகே வராமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குண்டம் விழா 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது.
    • பக்தர்கள் எரிகரும்புகளை கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பண்ணாரி யம்மன் கோவில் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள்.

    இந்தாண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செயய்ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா நடந்தது. வீதிஉலா பல்வேறு கிராமங்க ளுக்கு சென்றது. அப்போது பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து அம்மன் சப்பரம் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 4-ந் தேதி (செவ்வா ய்க்கிழமை) அதிகாலை நடக்கிறது.

    இதில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பா ர்க்கப்படுகிறது. விழாவை யொட்டி முன்னதாக 3-ந் தேதி இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறை வேற்றும் வகையில் எரிகரும்பு களை (விறகுகள்) கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    இதனால் கோவில் வளாகத்தில் எரி கரும்புகள் குவிந்து வருகிறது.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது.
    • இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு உலகப்பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலய பகுதியில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள், யானைகள் உலாவுவது வழக்கமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனையடுத்து வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும், பக்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ×