search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல்மில்கள்"

    • கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
    • ல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    திருப்பூர்:

    கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி திருப்பூர், கோவையில் நூல் மில் உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓ.இ., மில்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜவுளி உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, ஓ.இ., மில்கள், விசைத்தறிகள், ஆட்டோ லூம், சுல்ஜர், சைசிங் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த செயல்பாடுகளால் காடா துணியாக வடிவம் பெறுகின்றன. ஓ.இ., மில்களில் இருந்து கிடைக்கும் நூலை பயன்படுத்தியே, விசைத்தறிகள் இயங்குகின்றன. நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். எனவே இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜவுளி துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    மங்கலம்:

    கழிவுப்பஞ்சு விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட காரணங்களால் 160 ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடா்பாக திருப்பூரை அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மறுசூழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, திருப்பூா், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 680 ஓ.இ.(ஓபன் எண்ட் மில்கள்) மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், திருப்பூா், கோவை, வெள்ளக்கோவில், உடுமலை, ராஜாபாளையம் ஆகிய பகுதிகளில் கிரே உற்பத்திக்கான ஓ.இ.மில்கள் அதிக அளவில் உள்ளன. கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    கலா் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான கழிவுப்பஞ்சு பருத்தி விலையில் இருந்து சுமாா் 75 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் மின்சார கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான பீக் ஹவா்ஸ் கட்டணம் , டிமாண்ட் சாா்ஜ் கட்டணத்தால் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, கழிவுப் பஞ்சு விலையை கட்டுப்படுத்தக் கோரியும் மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரியும், ஓ.இ.மில்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் முதல்கட்டமாக தமிழகத்தில் 160 ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

    மேலும் எஞ்சியுள்ள ஆா்டா்களை முடித்தவுடன் ஓரிரு நாள்களில் அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    • கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, மற்றும் கோவை மாவட்டம் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மில்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 1500 டன் நூல் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்களில் மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூல் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.இந்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மில்களில் வேலை பார்த்து வரும் சுமார் ஐந்து ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நூல்மில் உரிமையாளர்கள் கூறுகையில்:-

    மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 50 சதவீதம் நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மின்கட்டணம் உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசு மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    ×