search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cripple"

    • கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
    • ல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    திருப்பூர்:

    கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி திருப்பூர், கோவையில் நூல் மில் உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓ.இ., மில்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜவுளி உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, ஓ.இ., மில்கள், விசைத்தறிகள், ஆட்டோ லூம், சுல்ஜர், சைசிங் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த செயல்பாடுகளால் காடா துணியாக வடிவம் பெறுகின்றன. ஓ.இ., மில்களில் இருந்து கிடைக்கும் நூலை பயன்படுத்தியே, விசைத்தறிகள் இயங்குகின்றன. நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். எனவே இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜவுளி துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×