search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yarn Mill"

    • அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,
    • கைது செய்தவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 42). இவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் வாடகை கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நூல் மில் நடத்தி வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு மில்லில் தீ விபத்து ஏற்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சம்பவத்தன்று செந்தில்குமார் மில்லின் அறையை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மில் அறையின் பூட்டை உடைத்து அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,

    இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது முத்தூர் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்ததில் நூல் மில்லில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளகோவில், எம்.ஜி.ஆர் நகர்., பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கருப்புசாமி , நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கவுதம் என்பது தெரியவந்தது.

    இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள அனுமந்தபுரத்தில் முருகப்பன் (30) என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. நேற்று மாலை பஞ்சில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மில்லின் மேற்கூறை முற்றிலுமாக எரிந்தது.

    மேலும் எந்திரங்கள் மற்றும் பஞ்சு, எரிந்து நாசமாயிற்று. இந்த தீ விபத்து க்கு மின்கசிவு காரணமாக இருக்கலாமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.
    • சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின.

    வெள்ளகோவில்:

    காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி நேற்று ஒரு டிப்பர் லாரி கோவை - திருச்சி ரோட்டில் காங்கேயம் அருகே உள்ள கொழுஞ்சிகாட்டு வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.இதனால் சுற்றுச்சுவர் சேதமாகின.

    சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின. சுற்றுச்சுவர் அருகே உள்ள வாட்ச்மேன் அறையில் பணியில் இருந்த ராம்பாரத்சமர்பஸ்வன் (வயது 38) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    லாரி ஓட்டி வந்த டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) என்பவருக்கு கால்களில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
    • ல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    திருப்பூர்:

    கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி திருப்பூர், கோவையில் நூல் மில் உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓ.இ., மில்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜவுளி உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, ஓ.இ., மில்கள், விசைத்தறிகள், ஆட்டோ லூம், சுல்ஜர், சைசிங் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த செயல்பாடுகளால் காடா துணியாக வடிவம் பெறுகின்றன. ஓ.இ., மில்களில் இருந்து கிடைக்கும் நூலை பயன்படுத்தியே, விசைத்தறிகள் இயங்குகின்றன. நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். எனவே இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜவுளி துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    மங்கலம்:

    கழிவுப்பஞ்சு விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட காரணங்களால் 160 ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடா்பாக திருப்பூரை அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மறுசூழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, திருப்பூா், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 680 ஓ.இ.(ஓபன் எண்ட் மில்கள்) மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், திருப்பூா், கோவை, வெள்ளக்கோவில், உடுமலை, ராஜாபாளையம் ஆகிய பகுதிகளில் கிரே உற்பத்திக்கான ஓ.இ.மில்கள் அதிக அளவில் உள்ளன. கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    கலா் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான கழிவுப்பஞ்சு பருத்தி விலையில் இருந்து சுமாா் 75 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் மின்சார கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான பீக் ஹவா்ஸ் கட்டணம் , டிமாண்ட் சாா்ஜ் கட்டணத்தால் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, கழிவுப் பஞ்சு விலையை கட்டுப்படுத்தக் கோரியும் மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரியும், ஓ.இ.மில்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் முதல்கட்டமாக தமிழகத்தில் 160 ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

    மேலும் எஞ்சியுள்ள ஆா்டா்களை முடித்தவுடன் ஓரிரு நாள்களில் அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    • எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரெட்டில வலசு பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. நேற்று பகலில் அங்குள்ள எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் யாருக்கு எவ்வித காயம் இல்லை. எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின. 

    • நூல் மில்லில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • மில் இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை வந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்கு மார் ( வயது41) என்பவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள வெள்ளமடை என்ற இடத்தில் நூல் மில் நடத்தி வருகின்றார்.

    இந்த மில்லில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மில் இயங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை வந்துள்ளது. உடனே வேகமாக பஞ்சு மற்றும் எந்திரத்தில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் எந்திரங்கள், பஞ்சு மற்றும் கட்டிடங்கள் சேதமாயிற்று சேதங்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது, இந்த தீ விபத்தினால் தொழிலாளர்கள் எவ்வித காயம் இன்றி தப்பினர்.

    • எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.
    • காங்கேயம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சரவணன் ( வயது 48) என்பவருக்கு சொந்தமான ஓயி நூல் மில் வெள்ளகோவில், செங்காளிபாளையம் ரோட்டில் உள்ளது.இந்த மில்லில் நேற்று பகல் திடீரென எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை அறிந்த மில் ஊழியர்கள் உடனடி யாக வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.தீயை அணைப்பதற்குள் எந்திரம், நூல் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாயிற்று.

    நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாருக்கு காயம் ஏற்படவி ல்லை .எரிந்து சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    • நூல் மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • 5 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்கபுரம் ரோடு பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீர் மின் கசிவு காரணமாக எந்திரத்தில் பற்றிய தீ அருகே இருந்த பஞ்சுமூட்டைகளில் பற்றியதால் மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு படையினர் மற்றும் 5 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு மற்றும் எந்திரங்கள் உள்ளிட்டவைகளில் பற்றிய தீ கட்டிடத்தின் மீதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதற்கு தாமதமானது. இதில் பல லட்சம் மதிப்பிலானஎந்திரங்கள்,பஞ்சு மூட்டைகள், நூல் மூட்டைகள் எரிந்து சேதமாகின. இந்த திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் ஊழியர்கள் நேற்று பகலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். சேதம் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    • பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.
    • தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயிற்று.

    வெள்ளகோவில், ஆகஸ்ட். 1

    வெள்ளகோவில் அருகே உள்ள அரியாண்டிவலசு என்ற இடத்தில் கே.தங்கவேல் (40) என்பவரின் ஓ. ஈ. நூல் மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று காலை 9 மணியளவில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. உடனே தீ பரவி பஞ்சில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயிற்று. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. ஊழியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த தீ விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் சின்னவடுகபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 50 ). இவர் அந்த பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 பேல் கழிவுப்பஞ்சுகள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×