search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே நூல் மில்லில் திடீர் தீ விபத்து
    X

    கோப்புபடம். 

    பல்லடம் அருகே நூல் மில்லில் திடீர் தீ விபத்து

    • நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் சின்னவடுகபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 50 ). இவர் அந்த பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 பேல் கழிவுப்பஞ்சுகள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×