search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி தீர்ப்பு"

    மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கிருஷ்ணகிரி:

    பெங்களூர் கோனப்ப அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பங்கி ராமா (38). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் எம்ஜிஆர் நகரில் தங்கி வசித்து வந்தார். இவருக்கும் பெங்களூர் அருகே உள்ள தொட்ட தொகூர் கிராமத்தைச் சேர்ந்த பீமாச்சாரி என்பவரின் மகள் சீதாலட்சுமி என்பவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் தேதியன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

    சம்பங்கிராமா ஓசூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பங்கிராமாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவி மற்றும் குழந்தையை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். 

    இந்நிலைலில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியன்று கணவன், மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பங்கிராமா மனைவியை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் சீதாலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பங்கிராமாவை கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். 

    அதில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சம்பங்கிராமாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். 
    காவேரிப்பட்டணம் அருகே மாமியாரை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கருக்கன்சாவடியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் முத்து (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும் போச்சம்பள்ளி அருகே உள்ள அனகோடியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் சங்கீதா (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சங்கீதா தனது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 21.03.2016 அன்று தனது மனைவி சங்கீதாவை அழைத்து வர முத்து அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அந்த நேரம் சங்கீதாவின் தாய் குந்தியம்மாளுக்கும் (57), முத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து தனது மாமியார் குந்தியம்மாளை தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து சங்கீதா போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். 

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி குந்தியம்மாளை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார். 
    வங்காளதேசம் விடுதலை போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் 17 கொலைகள் மற்றும் 15 பெண்களை கற்பழித்த வழக்கில் 5 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Bangladeshwarcrimes #deathsentence
    டாக்கா:

    வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு போர்குற்ற வழக்குகளை விசாரிக்க சர்வதேச கிரிமினல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    விடுதலை போரின்போது பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அயூப் கானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் வங்காளதேசத்தின் பட்டுவாகாலி மாவட்டத்துக்கு உட்பட்ட இட்டாபாரியா கிராமத்துக்குள் புகுந்து 17 பேரை கொன்றதாக  (முன்னாள்) பழமை வாத முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 5 பேர் கடந்த 2015-ம் ஆண்டில் கைது  செய்யப்பட்டனர். 

    மேலும், அதே கிராமத்தில் 15 பெண்களை கற்பழித்தது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது. வீடுகளை எரித்தது, ஆள்கடத்தல், சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் வங்காளதேச நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 5 பேருக்கும் முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகளை கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். 

    இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், ‘போர்குற்றத்தின் ஒரு பகுதியாக இவர்கள் 5 பேரும் பெண்களின் கற்பை சூறையாடுவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இதே மன உளைச்சலுடன் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அங்கீகரமாக இத்தகைய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தே ஆக வேண்டும்.

    எனவேம் குற்றவாளிகள் முஹம்மது இஷாக் ஷிக்தர், அப்துல் கனி, முஹம்மது அவால், சத்தார் படா, சுலைமான் மிருதா ஆகியோரை சாகும்வரை தூக்கிலிட்டு கொல்லுமாறு உத்தரவிடுகிறோம்’ என தெரிவித்துள்ளது. #Bangladeshwarcrimes #deathsentence
    ×