என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதின் கட்காரி"
- தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்தார்.
- சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலை ஆகும்.
சென்னை-பெங்களூர் இடையே 4 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், 'சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன' என்று தெரிவித்தார்.
சென்னை-பெங்களூர் 4 வழி எக்ஸ்பிரஸ் சாலை மொத்தம் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இது மொத்தம் 262 கி.மீ நீளம் கொண்டது. கர்நாடகாவில் 71 கி.மீட்டரும், தமிழகத்தில் 106 கி.மீட்டரும், ஆந்திராவில் 85 கி.மீட்டரும் நீளம் கொண்ட தாக இந்த சாலை அமைகிறது.
இது சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலை ஆகும். இந்த சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணிகள் முடிந்துவிட்டால் சென்னையில் இருந்து 3 மணிநேரத்துக்குள் பெங்களூர் செல்ல முடியும்.
இந்த சாலை 120 கி.மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் அதே வேகத்தில் பயணிக்க முடியும். சாலையின் இரு புறமும் வேலி அமைக்கப்படுவதால் விலங்குகள் சாலைக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இதில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சர்வீஸ் சாலை கிடையாது. 2 இடங்களில் மட்டுமே குடியிருப்புகள் வழியாக இந்த சாலை செல்கிறது. மற்ற பகுதி எல்லாமே திறந்த வழியாக செல்கிறது.
- தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.
- தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.
புதுடெல்லி :
வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக்கொள்ளாமல், சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்து அவற்றை தவறாக நிறுத்துகிறபோது அது போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசுகையில்,
"நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறேன். தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்புகிறபோது, அந்த குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறபோது, படம் எடுத்து அனுப்பியவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும்.
அப்போது வாகனங்களை தவறாக நிறுத்தும் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்" என குறிப்பிட்டார்.
வாகனங்களை நிறுத்துவதற்கு மக்கள் இடம் ஏற்படுத்திக்கொள்ளாமல், தங்களது வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமிக்க வைத்து விடுகின்றனர் என அவர் வருத்தம் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்