search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நள்ளிரவு"

    • மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.

    இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.

    உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.

    அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    • வீடுகள் சூறை- மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
    • வேன் கண்ணாடி உடைப்பு

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 25), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் (27) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது.

    இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு 10 மணியளவில் கணேஷ் தனது நண்பர்கள் எட்வின் ராபர்ட் (30), சுரேஷ்பாபு (29) ஆகியோருடன் அனீஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை அவர்கள் சேதப்படுத்திய தோடு தீ வைத்தும் எரித்த னர்.

    இதனைக் கண்ட அனீஸ் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது அவர் மீதும் கணேஷ் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். அவரும் பதிலுக்கு தாக்கி உள்ளார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திரண்டு வரவே, கணேஷ் கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. அப்போது அங்கு நின்ற வேன் கண்ணாடிகளையும் உடைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் அனீஸ் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அனீஸ் அவரது உறவினர்கள் சபீன், சுஜி ஆகியோர் நள்ளிரவு 12 மணியளவில், கணேஷ் வீட்டுக்குச் சென்று அங்கி ருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    மேலும் வீட்டில் இருந்த புறாக் கூண்டுகளையும் சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அனீஸ் மற்றும் கணேசை கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடந்தது.
    • ஆடி அமாவாசை விழா நிறைவு பெற்றது.

    கன்னியாகுமரி: 

    கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன்கோவில்உள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலா கலமாகக் கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதேபோலஇந்தஆண்டு அமாவாசை தினமான நேற்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதை யொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனும திக்கப்பட்டார்கள்.இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்ட வெள்ளி கலை மான் வாகனத்தில்அம்மன்எழுந்தருளிவீதிஉலா வந்தநிகழ்ச்சி நடந்தது.

    அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழி ெநடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டார்கள். அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல்சங்கமத்தில்ஆராட்டுநிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல்திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன்கோவிலுக்குள்பிரவேசித்தநிகழ்ச்சியும்நடந்தது.

    அதன்பிறகு அம்மனைவெள்ளிபல்லக்கில்எழுந்தருளச் செய்துகோவிலின்உள்பிரகாரத்தைசுற்றி3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய் தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும்நடந்தது. விழா ஏற்பாடுகளை கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    ×