search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கை துரோகம்"

    • மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
    • அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும்.

    இன்று நம்மில் பலர், பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது, ஹஜ்ஜை நிறைவேற்றுவது போன்ற கடமைகளை செய்தாலே போதும், சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால், சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து, அன்பு, நேர்மை, நீதி ஆகிய நற்பண்புகளை வளர்த்து, போட்டி, பொறாமை, புறம், நம்பிக்கை துரோகம், சூழ்ச்சி போன்ற அல்லாஹ் வெறுக்கக்கூடிய செயல்களை வெறுத்து வாழ்ந்து, தங்கள் குழந்தைகளுக்கும் அதனையே கற்றுக்கொடுப்பதே சிறந்தது.

    மற்ற மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கு அல்லாஹ்விடம் கேள்வி, கணக்கு கடுமையாக இருக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் `வறியவர் யார்?' என்று கேட்கப்பட்டபோது, `இம்மையில் மூட்டை, மூட்டையாக நன்மைகளை சேர்த்து விசாரணைக்காக ஒருவர் வருவார். அவருடைய நன்மைகளில் இருந்து அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கப்படும்.

    அதாவது இம்மையில் மற்றவர்களை திட்டி இருப்பார், அவதூறு கூறியிருப்பார், உரிமைகளைப் பறித்திருப்பார், அல்லது அநீதம் இழைத்திருப்பார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி கொடுக்க நன்மைகள் எதுவும் இல்லை எனும் நிலை வரும்போது அவர்களின் பாவங்கள் அந்த நபர் மீது சுமத்தப்படும். அவரது ஈடேற்றத்திற்கு ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் நரகில் தூக்கி வீசப்படுவார்', இவர்தான் வறியவர் என்று கூறினார்கள்.

    அண்டை வீட்டினர் அந்நியராக இருந்தாலும் அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்லும் மார்க்கமாக இருக்கும் இஸ்லாம், அநீதி இழைக்கும் மக்களைப் பற்றியும், அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நிலைமை பற்றியும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

    நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'நான் அநீதியை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன். எனவே நீங்களும் உங்களுக்குள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும். அப்பொழுது ஈடேற்றம் பெறுவதற்கான வழியே இருக்காது'.

    ஒருவரை ஆளுநராக நியமித்து அனுப்பும் பொழுது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி இவ்வாறு அறிவுரை பகர்வார்கள், 'அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவிற்கும், இறைவனுக்கும் எந்த வித தடையும் இருப்பதில்லை'.

    'அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவரின் துஆ அவசியம் ஏற்கப்படும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

    நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள், 'எவருடைய நாவின் தீங்கிலிருந்தும், கரங்களின் தீங்கிலிருந்தும் பிற மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே முஸ்லிம்'. நாம் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவோ, கெடுதலோ, அநியாயமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அநியாயம் என்று தெரிந்தும், அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே.

    `முஃமின்கள் யார்' என்று கேட்கப்பட்டது. `யாரைப் பார்த்து பிறர் பயமற்று இருக்கிறார்களோ அவர்கள் தான் முஃமின்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இன்று போகிற போக்கில் தங்கள் சொல்லாலும், செயலாலும் பிறருக்கு துன்பத்தைத் தரக்கூடிய மக்களை நாம் பார்க்கிறோம்.

    சரி, இறைவன் வெறுக்கக்கூடிய காரியங்களில் இருந்து நம்மை முழுவதுமாக விலக்கிக் கொள்வது எப்படி?

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்றால், நிச்சயம் நமது செயல்கள் எல்லாம் நற்செயல்களே.

    இரண்டாவதாக நம்முடைய வணக்க வழிபாடுகளில் உள்ளத்தூய்மையும், இறைவன் எனக்கு மிகச் சமீபமாக இருந்து என்னுடைய அத்தனை செயல்களையும் உற்று நோக்குகிறான் என்ற அச்சமும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட அச்சம் என்றால், இறைவனைக் குறித்தான பயத்தில் தானாகவே கண்ணீர் வர வேண்டும். தொழுகையில் மட்டுமல்ல, பகலிலும், இரவிலும், குர் ஆன் ஓதும் பொழுதும், ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும், சும்மா இருந்தாலும் உள்ளச்சத்ததோடு உங்களைப் படைத்த இறைவனை நினைவு கூருங்கள்.

    இறைவன் நம்முடைய வணக்க வழிபாடுகளையும், மற்ற நற்குணங்களையும் பொருந்திக் கொள்வானாக. நம்முடைய பாவங்களையும் மன்னித்து, குடும்பம், குடும்பமாக சுவனத்தில் நுழையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி, அவனின் திருமுகத்தைப் பார்க்கக் கூடிய பெரும் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

    • ஆா்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
    • தொழிலாளா்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    ஊட்டி,

    டேன்டீ தொழிலாளா்களை பாதுகாக்க வலியுறுத்தி தி.மு.க அரசுக்கு எதிராக கூடலூரில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு தி.மு.க அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. மத்திய பா.ஜ.க அரசு இவா்களை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளது.

    199 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொடிய நோய்களையும் பொருட்படுத்தாமல் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி வருவாயை ஈட்டிக் கொடுத்தது இந்த சமூகம்.

    சிறிமாவோ-லால் பகதூா் சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இங்கும் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி அரசுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனா். இவா்களுக்குத் தீப்பெட்டி அளவில் ஒரு வீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதில் எந்த வசதியும் இல்லை.

    இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலாளா்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அந்த வீடுகளில் உள்ள வசதிகள் கூட இங்கு தமிழக அரசால் வழங்கப்படும் வீடுகளில் இல்லை.

    தற்போதுள்ள தி.மு.க அரசு 5,315 ஏக்கா் தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதன் மூலம் தமிழா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு, ரூ.211 கோடி நஷ்டத்தில் இருக்கும் டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். 1998-ம் ஆண்டிலிருந்தே இந்த நிறுவனத்தை முடக்க சதி நடந்து வருகிறது. தனியாா் எஸ்டேட்டுகள் அனைத்தும் லாபத்தில் இயங்கும்போது அரசு நிறுவனம் மட்டும் எப்படி நஷ்டத்தில் இயங்குகிறது? இதற்கு முக்கியக் காரணம் தி.மு.க அரசுதான்.

    தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவா்களிடம் டேன்டீ தேயிலைத் தூளை விற்றாலே சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக இது மாறும். அதை செய்ய அரசு ஏன் தயங்குகிறது?

    கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலங்களில் குடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வெற்றி பெறும். அது இங்குள்ள பிரச்னைகளைத் தீா்க்க நல்ல வாய்ப்பாகவும் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் போஜராஜ், சபிதாபோஜன், வினோத்குமார் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    ×