search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nlc"

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மத்திய தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு நாளை கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி நாளை சென்னை தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த இரு முடிவுகளையும் பொறுத்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இருதரப்பினரும் தெரிவித்தனர். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகம் எங்களது புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்குகிறது. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    • வாய்க்கால் வெட்டும் வளையமாதேவி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    • இன்னும் இரண்டொரு நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் தொடங்கிய 3-வது நாளில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.

    இதையொட்டி வாய்க்கால் வெட்டும் வளையமாதேவி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    தொடர்ந்து வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 12-வது நாளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் வாய்க்கால் கரைப்பகுதியில் சிமெண்ட் கட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இன்னும் இரண்டொரு நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. பணிகள் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் பரபரப்பான சூழலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தற்போது வளையமாதேவி, எறும்பூர், ஆணை வாரி, சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.
    • நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.

    நெய்வேலி என்.எல்.சி.யில் பணி வழங்கப்பட்ட வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டது.

    இந்நிலையில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட இந்தியர்களின் பெயர்கள் உள்ளது குறித்து என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து என்எல்சி நிறுவனம் கூறியதாவது:-

    என்எல்சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது.

    என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது.

    வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.

    ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டது.

    நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.

    இவ்வாறு கூறியது.

    • என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததை அடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு மாற்றினர்.

    நேற்று என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று என்.எல்.சி. 2-வது சுரங்கம் வாசல் முன்பு 11-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க வாசல் வழியாக பணிக்கு செல்லும் நிரந்தர தொழிலாளர்களையும், சொசைட்டி தொழிலாளர்களையும் கைகூப்பி வணங்கி தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்படுவதால் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
    • நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களிலும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.

    சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம், சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்படுவதால் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

    நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களிலும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.

    நில உரிமையாளர்கள் ஆட்சேபணை இருந்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட நில எடுப்பு வருவாய் அலுவலரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும்.
    • சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார்.

    நெல்லை:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து பா.ம.க. சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

    இதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக பா.ம.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர். அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார்.

    அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது இந்திய தண்டனை சட்டம் 307, 506 உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட யாரும் எந்த தப்பும் செய்யாதவர்கள். கைது செய்யபட்டவர்கள் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. கடலூரில் இருந்து அவர்களை மாற்று சிறைக்கு மாற்ற என்ன காரணம்?

    என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை. 3-வது என்.எல்.சி. சுரங்கத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. புதிய சுரங்கம் அமைக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்திற்குள் வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் எந்தவித சுரங்கமும் தொடங்கமாட்டோம் என சொல்லிய முதலமைச்சர் என்.எல்.சி விவகாரத்தில் அமைதியாக உள்ளார்.

    என்.எல்.சி. விவகாரம் மண் தொடர்பான பிரச்சனை. தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனை. விவசாயிகள் நண்பன் என தமிழக அரசு இனி சொல்லக்கூடாது. எங்கள் கூட்டத்தின் மீது சமூக விரோதிகள் புகுந்ததன் காரணமாக தான் அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. என்.எல்.சியில் இனியும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தான் அரசு மற்றும் காவல் துறையின் நோக்கம். 64, 750 ஏக்கர் விளைநிலங்களை என்.எல்.சிக்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.

    மத்திய அரசை இந்த விவகாரம் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். நான் தனியாக இதனை செய்ய முடியாது. என்.எல்.சிக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எந்த விவசாயிக்கும் கிடையாது.

    நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அனைத்து விவகாரத்திலும் பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. என்.எல்.சி.க்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது.

    2026-ல் பா.ம.க மற்றும் அதன் நோக்கம் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் 2024-ல் தொடங்கும்

    அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும். நெய்வேலி தொடர்பான போராட்டமே மத்திய, மாநில அரசுகளை கண்டித்துதான் நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டும்.

    சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார். ஆனால் இந்த விவகாரம் நடக்கும் நிலையில் எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும். இந்த பிரச்சனை தேர்தலுக்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. அருள், தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவகுமார், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு, நெல்லை மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • என்.எல்.சி. 1-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை என்.எல்.சி. தலைவர் வீட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் அறிவித்து இருந்தார். ஆனால், போலீசார் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. அதனை தொடர்ந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றினர்.

    அதன்படி நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு போராட்ட இடத்தை மாற்றினர். இன்று 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு 1-வது சுரங்கத்தின் வாசல் வழியாக வேலைக்கு சென்ற நிரந்தர தொழிலாளர்களை தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கைகூப்பி வணங்கி ஆதரவு திரட்டினர்.

    நாளை (சனிக்கிழமை) 2-வது சுரங்க வாசல் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
    • பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.

    நெல்லை:

    என்.எல்.சி. நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளான கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்ட இடங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, அதற்கான இடத்தை என்எல்சி நிறுவனம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வரும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இப்பணியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பெரும்பாலானோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.

    தகவல் அறிந்து அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார். அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

    • காசோலையை, சிறப்பு துணை ஆட்சியர் நிலம் கையகப்படுத்துதல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • நாளை முதல் விவசாயிகள் இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.

    பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன் வந்தது.

    என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு அதை வழங்கவும் என்எல்சி ஒப்புதல் அளித்தது.

    பாதிக்கப்பட்ட விவசாயி தொடரந்த வழக்கு விசாரணையின்போது, "இந்த இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதிக்குள் வழங்கும்படியும், செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளுக்கான காசோலையை என்எல்சி நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

    இந்த இழப்பீடு தொகைக்கான காசோலையை, சிறப்பு துணை ஆட்சியர் நிலம் கையகப்படுத்துதல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாளை முதல் விவசாயிகள் இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    என்எல்சி நிறுவனம் ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் என்ற அளவில் காசோலையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியிருந்தது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரத்திற்கான சாகோலையை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் நடவடிக்கை.
    • போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.

    பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது பாசன நிலம் பாதிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பலர் என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    இதை எதிர்த்து என்எல்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    அதன்படி, என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு சட்டத்தை கையில் எடுத்து அனுமதிக்கப்படாத இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுப்போம் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    காவல்துறை குறிப்பிடும் இடங்களில் அமைதியாக போராட்டம் நடத்திக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது. இதில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை இந்திய காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஏ.எஸ்.இளஞ்செழியன் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிலையில் தொழிற் சங்க சிறப்பு தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரவு-பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து நேரு சாலையில் உள்ள என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கம் உள்ளது.
    • 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெய்வேலி:

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மின்சாரம் அனுப்பப்பட்டு வருகிறது.

    நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த கன்வேயர் பெல்ட்டில் மதியம் 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தீ அருகில் இருந்த எந்திரத்துக்கும் பரவியது. இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.

    இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் கூறும்போது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. எங்கள் போராட்டம் காரணமாக அனுபவம் இல்லாத தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுவதால், சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

    ×