search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    11-வது நாளாக போராட்டம் நீடிப்பு: என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
    X

    11-வது நாளாக போராட்டம் நீடிப்பு: என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை

    • என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததை அடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு மாற்றினர்.

    நேற்று என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று என்.எல்.சி. 2-வது சுரங்கம் வாசல் முன்பு 11-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க வாசல் வழியாக பணிக்கு செல்லும் நிரந்தர தொழிலாளர்களையும், சொசைட்டி தொழிலாளர்களையும் கைகூப்பி வணங்கி தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×