என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வட இந்தியர்களுக்கு பணி வழங்கிய விவகாரம்- என்.எல்.சி நிறுவனம் விளக்கம்
    X

    வட இந்தியர்களுக்கு பணி வழங்கிய விவகாரம்- என்.எல்.சி நிறுவனம் விளக்கம்

    • வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.
    • நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.

    நெய்வேலி என்.எல்.சி.யில் பணி வழங்கப்பட்ட வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டது.

    இந்நிலையில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட இந்தியர்களின் பெயர்கள் உள்ளது குறித்து என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து என்எல்சி நிறுவனம் கூறியதாவது:-

    என்எல்சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது.

    என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது.

    வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.

    ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டது.

    நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.

    இவ்வாறு கூறியது.

    Next Story
    ×