search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் பலி"

    • வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.
    • சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு வசந்த் நகர் என்ற பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வசந்த் நகர் 3-வது குறுக்கு தெருவில் நடந்த இந்த பணியில் இன்று காலை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    மரப்பாலம் துணைமின் நிலையம் பின்புறம் சுற்று சுவரையொட்டி தூர்வாரி வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி கொண்டிருந்னர்.

    அப்போது மின் துறையின் 33 ஆண்டுகள் பழைமையான சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதில் 3 தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கியும் கால்வாய் தண்ணீரில் மூழ்கியும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 3 பேரும் அரியலூர் நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பால முருகன், ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது.

    மீதமுள்ள 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.

    சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

    • 2 பேர் பலியான சம்பவம் காசர்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலம் கொப்பலா பகுதியை சேர்ந்தவர் லஷ்மப்பா (வயது43), ஷிவோக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் பசய்யா(40). இவர்கள் கேரளா மாநிலம் காசர் கோட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று காசர்கோட்டில் மார்க்கெட் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒரு கட்டிடம் மற்றும் அதன் அருகே இருந்த பெரிய காம்பவுண்ட் சுவருக்கு இடைப்பட்ட பகுதியில் குழி தோண்டினர்.

    அப்போது அந்த காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் லஷ்மப்பா மற்றும் பசய்யா ஆகிய இருவரும் இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சந்தையில் இருந்த தலைச்சுமை தொழிலாளர்களின் உதவியுடன், இடிபாடுகளை போலீசார் அகற்றுனர். அப்போது லஷ்மப்பா மற்றும் பசய்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்து கிடந்தனர்.

    அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் காசர்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • 3 தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், சுரங்கலை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருக்கு அதே பகுதியில் தனியார் உள் விளையாட்டு அரங்கம், மாநாட்டு மைதானம் உள்ளது.

    அதன் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.

    இந்த பணியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தூண்கள் இல்லாமல் அலுமினிய சட்டத்தலான உயரமான மேற்கூரை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து வெல்டிங் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த 3 தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இறந்தவர்களில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு (வயது 35), பீகாரை சேர்ந்த சுனில் (36) என தெரியவந்தது. மற்றவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    • ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.
    • கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது42). ரமணய்யா (38). தொழிலாளர்கள். ரமேஷ் மரங்களை வெட்டி அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இன்று காலை ரமேஷ் வேலைக்காக ரமணய்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சின்ன புலியூர் அருகே உள்ள ஒரு தைலம் மர தோட்டத்திற்கு மரத்தைப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது ஏற்கனவே அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து கிடந்தது.

    இதனை அறியாமல் சென்றபோது ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், கவரப்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காற்றுடன் மழை பெய்து இருக்கிறது.

    இந்த நிலையில் அதிகாலை மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து விழுந்து உள்ளது. இதனை கவனிக்காமல் சென்றபோது அதில் சிக்கி ரமேசும், ரமணய்யாவும் பலியாகி விட்டனர்.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்களில் உள்ள வயர்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதனை சரிபார்த்து மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
    • பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நேற்று காலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

    இந்த விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நடந்ததா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " மிசோரமில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வருத்தமடைந்தேன். தேசிய மீட்பு குழு, மாநில நிர்வாகம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், கடுமையான காயங்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயங்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை காணவில்லை.
    • ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    ஐஸ்வால்:

    மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பணி நடைபெற்று வருகிறது. 104 அடி உயரத்தில் இந்த மேம்பாலம் கட்டும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. வழக்கம்போல் இன்றும் பணி தொடங்கியது. 35 முதல் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காலை 10 மணியளவில் கட்டப்பட்டு வந்த அந்த ரெயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

    அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அலறினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை காணவில்லை.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நடந்ததா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கனிமத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழைக் காலங்களில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்படும்.

    ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்கள், ஜேட் கனிமத்தை தேடி வந்த உள்ளூர்வாசிகள் என்று தெரியவந்துள்ளது. அண்டை நாடான சீனாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து இங்கு வந்து ஜேட் கணிமத்தை எடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    ஒழுங்குப்படுத்தப்படாத இந்த சுரங்கப் பணியில் ஆண்டுதோறும் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கனிமத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. மீட்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியானார்கள். மேலும் 14 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.

    இன்று காலை திருமங்கலம் அருகே ராயபாளையம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருமங்கலம் பகுதியில் நள்ளிரவில் நடந்த 2 வெவ்வேறு சாலை விபத்துகளில் மேலும் 2 பேர் பலியானார்கள்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது.
    • தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு என எதிர்புறத்தில் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் உள்ள அனுராக் சிங் (வயது28), தன்ஜெய் சிங் (33), தரம்வீர் (40), வீரேந்திரஜா (37), மகாதேவ் சிங் (23) ஆகிய 5 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் தொழிற்சாலையின் எதிர்புறம் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 11-ந் தேதி இரவு அறையில் 5 தொழிலாளர்களும் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது. சற்று நேரத்தில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. இதில் இவர்கள் 5 பேரும் தீயில் சிக்கி கொண்டு அலறினர்.

    இவர்களது சத்தம் கேட்டு அருகே வசிக்கும் தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அறைக்குள் 5 பேரும் தீயில் உடல் கருகி சத்தம் போட்டபடி நின்றனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களில் 4 பேர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அனுராக் சிங் மற்றும் துப்ராவை சேர்ந்த தன்ஜெய்சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

    மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது.

    இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

    மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் - நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கருமத்தம்பட்டி:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. அதில் பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்த பணியை சேலத்தை சேர்ந்த பாலாஜி, பழனிசாமி ஆகியோர் எடுத்து செய்து வந்தனர்.

    அதில் பாலாஜியின் மேலாளர் அருண்குமார் மேற்பார்வையில் 7 தொழிலாளர்கள் இரும்பு தூண்களில் ஏறி விளம்பர பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரும்புத்தூண் 60 அடி உயரமாக இருந்தபோதிலும் அதில் பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென்று காற்று வீசியதால், இரும்பு கம்பிகள் உடைந்து விழுந்தன. இதனால் அந்த கம்பிகள் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் அந்த இரும்பு தூண்களுடன் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மீது இரும்பு தூண்கள் விழுந்து அமுக்கியது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38), குமார் (52), குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி இன்றி பேனர் அமைத்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலாஜி, பழனிசாமி, அருண்குமார் மற்றும் நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரின் மேலாளர் அருண்குமாரை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாலாஜி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அந்த இடத்தில் விளம்பர பேனர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரும்பு தூண்கள், விளம்பர பலகை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    ×