என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarry accident"

    • இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
    • இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

    ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் பல்லிகுரவா பகுதியில் கிரானைட் குவாரியில் பாறைகள் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

    இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய காயமடைந்த தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.   

    • பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர்.
    • தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தொழிலாளியான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சமும், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1.5 லட்சமும், கல்குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் என உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட மேகா மெட்டல்ஸ் என்ற தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

    தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்தையடுத்து தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய தமிழக கனிமவளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மிசோரம் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் சிக்கினர்.
    • விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.

    அய்ஸ்வால்:

    மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்தன. இதில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது. மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

    மேலும், காணாமல் போன 4 தொழிலாளர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    நெல்லை கல்குவாரி விபத்தில் பலியானவாகளில் ஒருவரது உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். பாறைகளின் நடுவில் சிக்கிய 6-வது நபரான  ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் உடல் 8 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.

      இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்ற நிலையில் மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  அவர்களது உறவினர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் உடலை பெற்று செல்ல அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

     முன்னதாக குவாரி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை ராஜேந்திரனின் உறவினர்களிடம் இன்று கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    அப்போது ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மற்ற 2 பேரின் உறவினர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    ×