search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திசையன்விளை அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி
    X

    திசையன்விளை அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி

    • பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வலதுபக்கம் திரும்பும்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 70), நாகமல் (65). தொழிலாளிகள்.

    நேற்று மாலை 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மன்னார் புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி வந்துள்ளார்.

    பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வலதுபக்கம் திரும்பும்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகமல் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். விபத்து குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×