search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவியாசனம்"

    • தசைகள் நன்கு இறுகி வலிமை அடையவும் உதவுகிறது.
    • பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மலாசனம்

    மலாசனத்தை தொடர்ந்து செய்துவருவதன் மூல மலச்சிக்கலை தீர்க்க முடியும் இதன் பெயரிலே இந்த ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்கிற முறையும் தரப்பட்டுள்ளது. நீங்கள் முழுதாக உட்காராமல் பாதி அமர்ந்த நிலையில் உட்கார வேண்டும். பின்னர் வணக்கம் கூறுவது போல் கைகளை வைத்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால் மலம் கழிப்பதற்கு அமரும் நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

    இந்த மலாசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதன் மூலம் நமது பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் நன்கு இறுகி வலிமை அடையவும் உதவுகிறது.

    தித்திலியாசனம்

    பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி பொதுவாக ஒரு வார்ம் அப் பயிற்சியாகத்தான் செய்யப்படுகிறது என்பதால் இந்த உடற்பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

    தரையில் அமர்ந்து உங்கள் கால்களை முன்னோக்கி நேராக நீட்ட வேண்டும். உங்கள் கால்களை குரோயின் பகுதியை நோக்கி பாதம் மற்றும் கால்களை நகர்த்த வேண்டும். உங்களால் முடிந்த அளவிற்கு குரோயின் பகுதியை நோக்கி உங்கள் கால்களை நகர்த்த வேண்டும். உங்கள் முழங்காலை நெஞ்சை நோக்கி மெதுவாக நகர்த்தவும். மீண்டும் தரையை நோக்கி உங்களால் முடிந்த வரை முழங்காலை கொண்டு செல்லவும். உங்கள் முழங்காலை மெதுவாக தரையை நோக்கி நகர்த்தவும். உங்கள் வசதிக்கு ஏற்றவாறு மட்டும் செய்யவும்.

    உங்களால் முடிந்தவரை எவ்வளவு மணித் துளிகள் வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் வலியோ அசாதரண உணர்வோ ஏற்படும் போது கண்டிப்பாக உடற்பயிற்சியை நிறுத்தி சீரிய இடைவெளியில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

    வயிறு சார்ந்த உறுப்புகள், கருப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகளின் செயல்திறனை தூண்டுகிறது. உடலின் சுழற்சி மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடல் அசைவுகளை எளிதாக்குவதற்கும், திரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது. கால் மற்றும் அடிவயிற்று பிடிப்புகளில் இருந்து மிகச்சிறந்த தீர்வுகளை அளிக்கிறது.

    தேவியாசனம்

    மேலே நீங்கள் பார்க்கும் வலுவான போஸ் தேவியாசனம் அல்லது தேவி போஸ். உட்காருவது நிலையில் இருப்பதால் தொடைகள் மற்றும் பிட்டம் எரியும் என்பதால், இந்த போஸ் வலுவாகவும் சக்தி வாய்ந்ததாகவும் உணர வைக்கிறது. அதே நேரத்தில், கைகளை உயர்த்தி, கைகள் மென்மையான ஞான முத்ராவைப் பிடித்தபடி இது ஒரு நுட்பமான போஸ் ஆகும், இது செறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    ×