search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malasana"

    • சுகப்பிரசவம் ஆவதற்கும் ஒரு சில ஆசனமுறைகள் உள்ளது.
    • ஆசனம் செய்தால் தான் சுகப்பிரசவம் என்பது இல்லை.

    பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை.

    பொதுவாக அனைத்து பெண்மணியும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்றே விரும்புகின்றனர். கர்ப்பம் தரித்த அனைத்து பெண்களும் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு பயிற்சியும் செய்ய கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கும் ஒரு சில ஆசனமுறைகள் உள்ளது. 7 மாதத்தில் இருந்து ஆசன முறையை கடைபிடிக்கலாம்.

    ஆசனம் செய்தால் தான் சுகப்பிரசவம் என்பது இல்லை. தகுந்த நேரத்தில் வீட்டு வேலை செய்தாலே சுகப்பிரசவம் ஆகிவிடும்.

    கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

     வீரபத்ராசனம்:

    வீரபத்ராசனம் என்பது உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்க உதவுவதுடன், இது கர்ப்பமாக இருப்பவர்களின் மனநிலையில் மேம்பாட்டை கொண்டு வர உதவுகிறது. மேலும் இவை தொடை மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

     வ்ருக்ஷாசனா:

    உடல் அழகை அதிகரிக்கவும், முதுகு வலியை நீக்குவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்க கூடிய நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது.

     உத்திதா திரிகோணாசனம்:

    இது இடுப்பு, தொடை மற்றும் முதுகு தசை வலிகளை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை நீக்குவதற்கு இவை பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரும் பிரச்சனையாக உள்ள செரிமான பிரச்சனை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

     வஜ்ராசனம்:

    பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகளாகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க இந்த ஆசனம் உதவுகிறது.

     மலாசனம்:

    இந்த மலாசனத்தை செய்வதன் மூலமாக கர்ப்பிணிகள் எளிதில் சுகப்பிரசவம் அடைவதற்கு உதவுகிறது. இந்த ஆசன முறையை தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது. சுகப்பிரசவத்தை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம்.

    இது மட்டுமல்ல மேற்குறிப்பிட்டுள்ள ஆசனங்கள் அத்தனையையும் கர்ப்பிணிகள் செய்வது மிகவும் நல்லது. கர்ப்ப காலங்களில் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையை தடுக்க உதவும் இந்த ஆசனங்கள் தான் நமக்கு பிரசவ நேரத்தில் சுக பிரசவத்தை

    ஏற்படுத்தவும் உதவும்.

    • தசைகள் நன்கு இறுகி வலிமை அடையவும் உதவுகிறது.
    • பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மலாசனம்

    மலாசனத்தை தொடர்ந்து செய்துவருவதன் மூல மலச்சிக்கலை தீர்க்க முடியும் இதன் பெயரிலே இந்த ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்கிற முறையும் தரப்பட்டுள்ளது. நீங்கள் முழுதாக உட்காராமல் பாதி அமர்ந்த நிலையில் உட்கார வேண்டும். பின்னர் வணக்கம் கூறுவது போல் கைகளை வைத்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால் மலம் கழிப்பதற்கு அமரும் நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

    இந்த மலாசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதன் மூலம் நமது பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் நன்கு இறுகி வலிமை அடையவும் உதவுகிறது.

    தித்திலியாசனம்

    பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி பொதுவாக ஒரு வார்ம் அப் பயிற்சியாகத்தான் செய்யப்படுகிறது என்பதால் இந்த உடற்பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

    தரையில் அமர்ந்து உங்கள் கால்களை முன்னோக்கி நேராக நீட்ட வேண்டும். உங்கள் கால்களை குரோயின் பகுதியை நோக்கி பாதம் மற்றும் கால்களை நகர்த்த வேண்டும். உங்களால் முடிந்த அளவிற்கு குரோயின் பகுதியை நோக்கி உங்கள் கால்களை நகர்த்த வேண்டும். உங்கள் முழங்காலை நெஞ்சை நோக்கி மெதுவாக நகர்த்தவும். மீண்டும் தரையை நோக்கி உங்களால் முடிந்த வரை முழங்காலை கொண்டு செல்லவும். உங்கள் முழங்காலை மெதுவாக தரையை நோக்கி நகர்த்தவும். உங்கள் வசதிக்கு ஏற்றவாறு மட்டும் செய்யவும்.

    உங்களால் முடிந்தவரை எவ்வளவு மணித் துளிகள் வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் வலியோ அசாதரண உணர்வோ ஏற்படும் போது கண்டிப்பாக உடற்பயிற்சியை நிறுத்தி சீரிய இடைவெளியில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

    வயிறு சார்ந்த உறுப்புகள், கருப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகளின் செயல்திறனை தூண்டுகிறது. உடலின் சுழற்சி மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடல் அசைவுகளை எளிதாக்குவதற்கும், திரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது. கால் மற்றும் அடிவயிற்று பிடிப்புகளில் இருந்து மிகச்சிறந்த தீர்வுகளை அளிக்கிறது.

    தேவியாசனம்

    மேலே நீங்கள் பார்க்கும் வலுவான போஸ் தேவியாசனம் அல்லது தேவி போஸ். உட்காருவது நிலையில் இருப்பதால் தொடைகள் மற்றும் பிட்டம் எரியும் என்பதால், இந்த போஸ் வலுவாகவும் சக்தி வாய்ந்ததாகவும் உணர வைக்கிறது. அதே நேரத்தில், கைகளை உயர்த்தி, கைகள் மென்மையான ஞான முத்ராவைப் பிடித்தபடி இது ஒரு நுட்பமான போஸ் ஆகும், இது செறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    ×