search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் சின்னம்"

    • அஜித் பவாருக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
    • சரத்பவார் சட்டப்போராட்டம் நடத்தும் அதேவேளையில், புதிய கட்சி பெயரை அறிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர் சரத் பவார். இந்த கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.-க்களுடன் தனியாக செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா- பாஜனதா கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது. பின்னர் தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தம் எனத் தெரிவித்து கடிகாரம் சின்னத்தையும் அவரது அணிக்கே வழங்கியது.

    இதனால் சரத் பவார் புதுக்கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டது. அவர் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் எனப் பெயர் வைத்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னம் ஒதுக்கியுள்ளது. சரத் பவார் கட்சிக்கு "கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன் (Man blowing Turha- பராம்பரிய இசைக்கருவி)" சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

    வரும் மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து போட்டியிட இருக்கின்றன. விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
    • பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக விஜய் கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கட்சி யின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப் பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×