search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேய்பிறை அஷ்டமி திருவிழா"

    • 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.
    • மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திருவிழா நடக்கும்.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும். அதன்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திருவிழா நடக்கும். அன்றைய நாளில் சுவாமி-அம்பாள் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.

    அதன்படி மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சண சப்பரத்தை காண்போருக்கு துன்பம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஜதீகம். இதனால் அஷ்டமி சப்பரத்தை காண பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியான இன்று (வியாழக்கி ழமை) சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தரு ளினர். பின்னர் அலங்கரிக் கப்பட்ட பெரிய சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறிய சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு அஷ்டமி சப்பர வீதிஉலா சிவாய கோஷம் முழங்க தொடங்கியது.

    இதில் கலந்துகொண்ட சிவ பக்தர்கள் கயிலாய வாத்தியம், சங்கு ஒலியை எழுப்ப பெரிய சப்பரத்தை பக்தர்கள் வடம்பிடித்து முன்னே சென்றனர். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து சென்றனர்.

    கீழமாசி வீதியில் தொடங் கிய அஷ்டமி சப்பர வீதி உலா யானைக்கல், கீழ வெளிவீதி, தெற்கு வெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேல வெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுதெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

    முன்னதாக வழிநெடுகிலும் ஏராளமானோர் குடும் பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அஷ்டமி சப்பரம் சென்ற சாலைகளில் சிவாச்சாரி யார்கள் அரிசியை சாலைகளில் தூவி விட்டவாறு சென்றனர். அதனை பக்தர்கள் ஆர்வத்துடன் சேகரித்து வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டினால் பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை.

    சித்திரை தேரோட்டத்திற்கு அடுத்தப்படியாக அஷ்டமி சப்பரத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.

    ×