search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பத்திருவிழா"

    • சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து காலை தெப்பத்திற்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை யில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவு 9.30 மணிக்கு ஏலவார் குழலி-ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது "ஓம் நமச்சிவாயா" என்று பக்தர்கள் மனமுருக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
    • தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார்.

    அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    • கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது.
    • மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அர்த்த நாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

    கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது. மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து நேற்று மாலை தெப்ப திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், டி.எஸ்.பி. மகாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன், அர்த்நாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஊர்கவுண்டர் ராஜா, மாரியம்மன் கோவில் முக்கியஸ்தர் முத்துகணபதி, தீயணைப்பு துறை அலுவலர் குணசேகரன், தாசில்தார் அப்பன் ராஜ் ஆகியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அலங்கரிக்கபட்ட தெப்பதேரில் பெரிமாரி யம்மன், சின்னமாரியம்மன், அழகு முத்து மாரியம்மன் எழுந்தருளிய பின் சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டு தெப்பத் தேர் வடம் பிடிக்கப்பட்டது. கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனிவந்த அம்மன்களுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடுகுளப் பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பதிருவிழாவைக் காண்பதில் ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

    ×