search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theppathruvizha"

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • காளையார் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோயிலில் கடந்த 26 -ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தேரில் ஸ்வர்ணவல்லிஅம்மன் சமேத சொர்ண காளீஸ்வரர் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப் பாளர் பால சரவணன், மற்றும் ஸ்தானிகர் காளீஸ்வர குழுக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து காலை தெப்பத்திற்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை யில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவு 9.30 மணிக்கு ஏலவார் குழலி-ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது "ஓம் நமச்சிவாயா" என்று பக்தர்கள் மனமுருக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×