search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீராத வயிற்று வலி"

    • அக்னேஷ் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
    • மன உளைச்சளில் இருந்த அக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே பு.ஆதி வராகநத்தம் பகுதியை சேர்ந்தவர் அக்னேஷ் (வயது 18) இவர் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் இந்த வயிற்றுவலிக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வயிற்றுவலி அதிக மாகவே மன உளைச்சளில் இருந்த அக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை யடுத்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அக்னேஷ் தூக்கில் பிண மாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து புவனகிரி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அக்னே ஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தாய் சடையம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.
    • கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே வானகொட்டாய் பகுதியே சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தாய் சடையம்மாள் (வயது 77). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது. இதனால் மனமுடைந்த சடையம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவாணர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் இருந்த அசோக் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×