search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கோவில்"

    • சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வருகிற 28, 29-ந்தேதி (சனி, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி 28-ந்தேதி (நாளை) திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10,874 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
    • அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அதையொட்டி, தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் 7-ம் நாளன்று மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை சீரமைத்து, அதன் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது. மகாரதத்தின் அச்சு, பீடம், விதானம், ஹைடாலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, பொதுப்பணித்து றையின் (கட்டுமானம்) உறுதிச்சான்று பெறப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

    சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபத் திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.
    • கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.

    இதனை பயன்படுத்திக்கொண்டு கும்பல் ஒன்று பக்தர்களிடம் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்து நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பெண்கள் பிச்சை எடுக்கும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சமூகநலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டவைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கை குழந்தைகளை வைத்தபடி பெண்களும் மற்றும் சிறுவர்களும் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் கிரிவலப் பாதையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோசாலை உள்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சிறுவர், சிறுமிகளை பொம்மை விற்பனை செய்யலாம் என அழைத்து வந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தி உள்ளனர்.

    அதிகாரிகள் சிறுவர்களை பிடிப்பதைக் கண்ட கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர் சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் படிக்கக்கூடிய இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலைக்கு புதியதாக வந்துள்ள சாதுக்கள் சாமியார்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

    • ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் கோட்டத்தில் 130 பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பத்தூரில் 30 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூரில் இருந்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல பவுர்ணமியொட்டி கலசப்பாக்கம் அடுத்துள்ள பருவதமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் மலை மீது ஏரி தரிசனம் செய்தனர். குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.

    • 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும்.
    • திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது.

    காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும்.

    விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.

    மூலவர் சன்னதி முன்பு உள்ளதங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெறும். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    ஒரே நாளில் 5 தேர்கள் பவனி என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும் என்பதால் காலையில் தொடங்கும் மகாதேரோட்டம் இரவு வரை நடைபெறும்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் மாதம் 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

    ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

    இதற்காக, 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும்.

    இதையடுத்து, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அக்னி பிழம்பாக காட்சி தரும் அண்ணாமலையாரை குளிர்விக்க தீர்த்தவாரி நடைபெறுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    கார்த்திகை தீப திருவிழாவின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வரும் 21-ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

    அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெறும்.

    பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

    • மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
    • கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் கோவிலுக்கு யானையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுத்தினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி அதிகாலையில் கோவில் வளாகத்தில் இறந்தது.

    பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 7 வயதில் கோவிலுக்கு வந்த ருக்கு 23 ஆண்டுகளாக ஆன்மிக பணியை செம்மையாக செய்தது. தனது 30-வது வயதில் மரணம் அடைந்தது.

    கோவில் வளாகத்தின் அருகில் யானை ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.

    மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மணியம் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை கோவிலில் யானை ருக்கு இறந்து 5½ ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை யானை இல்லாத நிலையே உள்ளது.

    கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் கோவிலுக்கு யானையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுத்தினர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    • பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூரு, திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    பவுர்ணமி இன்று காலை 8.17 மணி வரை நீடித்ததால் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.

    கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வழிபாடு செய்தனர்.

    இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது.

    போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூரு, திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.
    • ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி நாளை (வியாழக்கிழமை) காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    மேலும் பவுர்ணமியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.

    புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.

    வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்.

    இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும் எனவே ஆவணி பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் சகல நன்மையும் சிறப்புகளும் தேடி வரும் என்று ஐதீகமாக கூறப்படுகிறது.

    இதனால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். கோவிலில் இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    • ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி வருகிறது.
    • 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) வருகிறது. 30-ந் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பவுர்ணமியையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

    வேங்கிக்கால்:

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 1 மணிக்கு நிறைவடைந்தது.

    நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதிகாலை தொடங்கி இரவு 11 மணி வரை இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    சுமார் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்.

    தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    கடந்த சில மாதங்களாக கிரிவல பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியிலும் அதிகபட்சமாக 10 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

    பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. பவுர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர். பவுர்ணமி நாட்களில் சென்னை, விழுப்புரத்திற்கு சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.

    அதோடு, போக்குவரத்து மாற்றம், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

    ×