search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் நிறுத்தம்"

    • வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.

    சில மாதங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணி கணக்கில் போனில் பேசி வந்தனர்.

    வைஷ்ணவ் தங்களது பெற்றோரிடம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அவரது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைஷ்ணவ்க்கும் இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தது.

    அப்போது வைஷ்ணவ் தனது வருங்கால மனைவிக்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பில் வைர மோதிரம், ரூ.10 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள், ஓட்டல் மற்றும் உணவுக்காக ரூ.30 லட்சம் என ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார்.

    வைஷ்ணவ் மிகுந்த உற்சாகத்தில் திருமண நாளை நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார்.

    கடந்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வைஷ்ணவுக்கு போன் செய்த இளம் பெண் அவசரமாக ரூ.7 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் தனது தந்தையிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.

    அப்போது இளம் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு இளம் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

    இதனால் இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.அப்போது வைஷ்ணவ் இளம்பெண்ணை தாக்கி உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் வீட்டிற்கு வேகமாக சென்றார் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் வைஷ்ணவ் பெற்றோரை அழைத்து உங்கள் குடும்பம் எங்களது அந்தஸ்திற்கு ஏற்றது இல்லை. மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை தாக்கியதால் திருமணத்திற்கு விருப்பம் இல்லை. என தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவ் மணமகள் வீட்டாரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.

    அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை குடிபோதையில் தாக்கியதாக வைஷ்ணவி மற்றும் அவரது பெற்றோர் மீது ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.
    • மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த போச்சாரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டார் பத்ர்த்ரி குடேம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

    பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.

    நேற்று முன்தினம் மாலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

    திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.

    நேற்று காலை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    அப்போது மணப்பெண் மண்டபத்திற்கு வர மறுத்தார். கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.

    மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை. மணமகளின் முடிவு குறித்து திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் திருமணம் நின்றது. களைகட்டி இருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை இது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினரும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்தனர்.

    பின்னர் மணமகளுக்கு வரதட்சணையாக கொடுத்திருந்த ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை.
    • மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது.

    மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கேட்டு இருந்தனர்.

    அதன்படி மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முந்தின நாள் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த கட்டில் உள்ளிட்ட பர்னீச்சர்கள் பழைய பொருட்களாக இருந்தது.

    மணப்பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அப்போது மணமகனின் வீட்டார் நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை தரவில்லை. மேலும் நீங்கள் கொண்டு வந்துள்ள கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னீச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது.

    இந்த திருமணத்தில் எங்களது மகனுக்கு விருப்பமில்லை என அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பினர்.

    அப்போது மணமகளின் தந்தை பர்னீச்சர் பொருட்கள் புதியதாக வாங்கி தருவதாகவும் தற்போது திருமணத்தை நிறுத்த வேண்டாம். இல்லை என்றால் உறவினர்கள் முன்னிலையில் அவமானம் ஆகிவிடும் என பலமுறை கெஞ்சி பார்த்தும் அவர்கள் மனம் இறங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
    • முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிதம்பரம்:

    கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அருகே வரகூர் பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று வந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கினர்.

    இன்று காலையில் வெகுநேரமாகியும் அறையை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.
    • நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.

    அப்போது, நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் திருமண நிச்சயிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

    இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அரவிந்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் மணமகன் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய மணமகள் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார்.
    • மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி (வயது 26) என்ற வாலிபருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக தொடங்கியது. மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டனர்.

    அப்போது திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

    விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய அவர் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார். இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.

    ஆனால் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரின் குணாதிசயங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்திய கையோடு இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு சென்றும் புகார் அளித்தார்.

    சம்பவத்தை கேட்டறிந்த போலீசார் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் கூறுகையில்,

    நாங்கள் மேடையில் இருந்த போது அவர் என்னை தகாதமுறையில் தொட்டார்.

    உடனே நான் அதை தடுத்தேன். பின்னர் அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன். அவர் என் சுயமரியாதையை பற்றி கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் மோசமாக நடந்து கொண்டார்.

    எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார்? என பயமாக இருக்கிறது. எனவே அவருடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.

    மணமகளின் தாயார் கூறுகையில், எனது மருமகனின் நண்பர்கள் தூண்டுதலின் பேரிலேயே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இப்போது என் மகள் அவருடன் செல்ல விரும்பவில்லை.

    நாங்கள் சமாதானப்படுத்தியும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே நாங்கள் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறினார்.

    ஆனால் இதுகுறித்து போலீசார் மணப்பெண்ணிடம் விசாரித்த போது அவ்வாறு எந்த பந்தயமும் கட்டவில்லை என கூறினார்.

    இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பங்கஜ் லாவணியா கூறுகையில், முறைப்படி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தற்போது விவேக் அக்னிகோத்ரியை மணமகள் நிராகரித்துள்ளார். எனவே 2 நாட்களுக்கு பிறகு அடுத்ததாக என்ன செய்வது என்று முடிவு செய்வோம் என்றார்.

    • சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.
    • திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

    திருமங்கலம்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா(வயது 30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நாகபிரியாவும், திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சின்னசாமி பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், சின்னசாமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சின்னசாமி நாகபிரியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதற்கிடையே சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகபிரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் சின்னசாமிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு இன்று காலை வந்தார். சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்தார்.

    இதனால் சின்னசாமிக்கு நடைபெற இருந்த திருமணம் நடைபெறாமல் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணமக்கள் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாகபிரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் போலீசார் பேசி திருமணத்தை நிறுத்தினர்.

    பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை ஆசிரியை தடுத்து நிறுத்திய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சதீசும், ரேவதியும் ராயபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே காதல் ஏற்பட்டது.
    • ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார். அவர் எப்படியாவது திருமண நேரத்தில் கடைசியில் புகுந்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

    பெரம்பூர்:

    தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர்.

    இன்று அவர்களது திருமணம் தண்டயார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்து இருந்தனர். முன்னதாக நேற்று இரவு மணமக்கள் வரவேற்பும் சிறப்பாக நடைபெற்றது.

    இன்று காலை 6.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் முடிந்து மணமேடையில் மணமகன் மணிகண்டனும், மணமகள் ரேவதியும் அமர்ந்து இருந்தனர். வேதமந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட தயார் ஆனார்.

    அந்த நேரத்தில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மணமகன் மணிகண்டன் கையில் வைத்திருந்த தாலியை தட்டி விட்டார். இதில் தாலி கீழே தரையில் விழுந்தது.

    இதனால் மணமகன் மணிகண்டன் அதிர்ச்சி அடந்தார். அப்போது எதிர்பாராமல் நடந்து விட்டதாக கூறிய அந்த வாலிபர் தாலியை எடுத்து மணிகண்டனிடம் கொடுப்பது போல் நடித்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட முயன்றார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகனும், அருகில் இருந்த உறவினர்களும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தாலி கட்டும் முயற்சியை தடுத்தனர். அவனிடம் இருந்த தாலியையும் பறித்தனர்.

    உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அப்போதுதான் அவர் மணமகள் ரேவதியை காதலித்து வந்தது தெரிந்து திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

    விசாரணையில் அவர் தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து திருமணம் நின்று போனது. இதனால் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.

    சதீசும், ரேவதியும் ராயபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே காதல் ஏற்பட்டது.

    இதற்கிடையே ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார். அவர் எப்படியாவது திருமண நேரத்தில் கடைசியில் புகுந்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

    அதன்படி சதீஷ் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தே திருமண மண்டப தில் சுற்றி வந்துள்ளார். மணமகள் ரேவதியின் நண்பர் என்று கூறியதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்திய சதீஷ் மணமேடை வரை அருகே வந்து நின்றார். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டி விட்டு அதனை காதலியின் கழுத்தில் கட்ட முயன்று கடைசியில் தோல்வி அடைந்தார்.

    திருமணம் நின்றதால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபம் களை இழந்து சோகமயமாக காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவீட்டாரையும் மற்றும் மணமகள், மணமகன், காதலன் ஆகிய 3 பேரையும் வரவழைத்து விசாரித்தனர்.

    3 பேரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி வருவதால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். 3 பேரின் எதிர்காலமும் பாதிக்காத வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    திருமணம் நிச்சயம் செய்த நாள் முதல் ரேவதி தனது காதலன் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் எப்போதும் போல் மணமகன் மணிகண்டனிடம் பேசி இருக்கிறார்.

    இதனால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. திருமண வரவேற்பின்போது சதீஷ் மணமக்கள் அருகில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×