search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் தமிழன்ஸ்"

    • திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
    • இரண்டாவதாக ஆடிய மதுரை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, திருப்பூர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 45 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, அதன்பின்னர் சரிவில் இருந்து மீள முடியவில்லை.

    இறுதியில், மதுரை அணி 76 ரன்களில் சுருண்டது. இதனால் திருப்பூர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 117 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணியின் பாபா அபராஜித் அரை சதம் அடித்தார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரிஷ் 7 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். சஞ்சய் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், நெல்லை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • திருப்பூர் அணி சார்பில் மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.
    • நெல்லை அணியின் ஈஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. நெல்லை அணியின் துல்லியமான பந்துவீச்சில் திருப்பூர் அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • திருச்சி அணியின் சரவணகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • திருப்பூர் அணியின் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 34 ரன்னும், அமித் சாத்விக் 26 ரன்னிம் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    இதனால் 6 விக்கெட்டுக்கு 98 ரன்களை எடுத்து திணறியது.

    அடுத்து இறங்கிய துஷார் ரஹேஜா, மொஹமது ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், திருப்பூர் அணீ 6 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 26 பந்தில் 42 ரன்னுடனும், மொஹமது 15 பந்தில் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • ரூபி திருச்சி வாரியர்ஸ் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முரளி விஜய் 16 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 34 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெறும் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அமித் சாத்விக், முரளி விஜய் அதிரடியாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 57 ஆக இருக்கும்போது முரளி விஜய் 34 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 26 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராஜகோபால் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஆதித்ய கணேஷ் 15 ரன்னிலும், அட்னன் கான் 13 ரன்னிலும், ஆண்டனி தாஸ் 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    ×