search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாபா அபராஜித் அசத்தல் - திருப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நெல்லை
    X

    3 விக்கெட் வீழ்த்திய ஈஸ்வரன்

    பாபா அபராஜித் அசத்தல் - திருப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நெல்லை

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 117 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணியின் பாபா அபராஜித் அரை சதம் அடித்தார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரிஷ் 7 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். சஞ்சய் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், நெல்லை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×