search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில்"

    • இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 25-ந்தேதி அக்‌ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி 25-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம், 22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

    • பிரம்மோற்சவ விழா 26-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    அதையொட்டி 25-ந்தேதி மாலை அங்குரார்பணம், 26-ந்தேதி கொடியேற்றம், 30-ந்தேதி கருட வாகன வீதிஉலா, ஜூன் 2-ந்தேதி தேரோட்டம், 3-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தி கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

    • வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
    • திருப்பதியைச் சேர்ந்த பக்தர் கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை தங்க விமான கோபுரம் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    கோவில் மூலவர் சன்னதி, கோவில் வளாகத்தில் உள்ள இதர சன்னதிகள், சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரிமஞ்சள், பச்சைகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதியைச் சேர்ந்த பக்தரும், காணிக்கையாளருமான மணி என்பவர் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார். அந்தத் திரைச்சீலைகளை கோவில் உதவி அதிகாரி ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டாள் நீராடும் உற்சவம் கடந்த 7-ந்தேதியில் இருந்து நடந்து வருகிறது.
    • ஆண்டாள் தாயாருக்கு கொலு, வெந்நீரால் அபிஷேகம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் நீராடும் உற்சவம் கடந்த 7-ந்தேதியில் இருந்து நடந்து வருகிறது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஆண்டாள் தாயார் கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி ராமச்சந்திரா தீர்த்த கட்டத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார்.

    அங்குள்ள மண்டபத்தை அடைந்ததும் ஆண்டாள் தாயாருக்கு கொலு, வெந்நீரால் அபிஷேகம் நடந்தது. ஆண்டாள் தாயார் மாலை வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பிறகு மாலை ஆண்டாள் தாயார் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோதண்டராமசாமி கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து கோவிந்தராஜசாமி கோவிலுக்கு ஊர்வலமாகத் திரும்பினார். வழி நெடுக பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். இதோடு ஆண்டாள் நீராடும் உற்சவம் நிறைவடைந்தது.

    • 15-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை நடக்கிறது.
    • 16-ந்தேதி கோதாதேவி பரிணய உற்சவம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மாலை போகி தேர், கொலு, சாமி வீதிஉலா, 15-ந்தேதி காலை மகர சங்கராந்தி பண்டிகை, சங்கராந்தி திருமஞ்சனம், 16-ந்தேதி கோதாதேவி பரிணய உற்சவம், அன்று நடக்க இருந்த பா்வேடு உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

    அன்று புண்டரிகவல்லி தாயார் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், மலர் மாலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார்.
    • கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள தேவஸ்தான தங்க நகைகள் பிரிவையும், கோவிலில் தற்போது நடந்து வரும் மூலவர் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகளையும் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவிலில் மூலவர் கோபுரம் தங்க முலாம் பூசும் பணிக்காக 50 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாாிகள் இணை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    அந்தப் பணிகளை விரைவுபடுத்த கோவிலில் உள்ள அலுவலகங்களை மாற்றி, பொற்கொல்லர்களுக்கு தேவையான 5 பட்டறைகளை ஏற்பாடு செய்யுமாறு இணை அதிகாரியிடம் கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    அப்போது பொற்கொல்லர்களுடன் உரையாடிய இணை அதிகாரி வீரபிரம்மன், தெய்வீகப் பணியை முழு ஈடுபாட்டுடன் முடிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

    அத்துடன் கோவிந்தராஜசாமி கோவில் மூலவர் கோபுரத்தில் தங்க முலாம் பூசும் பணிகளை விரைவுபடுத்தவும், திட்டமிட்டபடி பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தி முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.

    பின்னர் தேவஸ்தானத்தின் பழைய ஹுசூர் அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, செப்புத் தகடுகள், வெண்கலம் போன்றவற்றைப் பொற்கொல்லர்கள் வைக்கும் அறைகளாகப் பழுதுப்பார்த்து பயன்படுத்த கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பழுதான பொருட்களை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பஞ்சலோக பொருட்கள் வைக்கும் பிரிவையும் ஆய்வு செய்தார். அந்த அறையை சரியான காற்றோட்டத்துடன் விசாலமானதாக அமைக்க பொறியியல் துறை அதிகாரிகளுக்கு இணை அதிகாரி உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர்கள் நாகேஸ்வரராவ், வேணுகோபால், கோவில் உதவி அதிகாரி சுப்பராஜு மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • தங்க மேற்கூரை பணியை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு.
    • பக்தர்களுக்கு இனிமையான சூழலை உருவாக்க நடவடிக்கை.

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசுகையில், திருப்பதி சேஷாசல வனப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 'அகேசியா' தாவரத்தைப் பாரம்பரிய தாவரங்களுடன் மாற்றும் திட்டத்தை விரைவுப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    ஒரு ஹெக்டேர் நிலத்தில் அகேசியாவை மாற்றும் மாதிரித் திட்டத்தை வனப் பகுதியில் உள்ள பெரிய பகுதிகளுக்கு படிப்படியாக விரிவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தத் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மேலும், பக்தர்களுக்கு இனிமையான சூழலை வழங்கும் வகையில் திருமலை சாலைகளை அழகுபடுத்துதல், தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனம் பணிகளை விரைவுபடுத்துதல், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் மூலவர் விமானத்துக்கு தங்க மேற்கூரை அமைக்கும் பணியை அக்டோபர் மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரையின் பேரில் திருப்பதியில் உள்ள கோசாலையை ஒரு முன்மாதிரி கோசாலையாக மாற்றுவதற்கான விரிவான செயல் திட்டம் வகுக்கப்படும், என்றார். உள்ளூர் கோவில்களில் நடந்து வரும் கோபூஜை நிகழ்ச்சியை கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மம், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்ம கிஷோர், நிதித்துறை அதிகாரி பாலாஜி, தேவஸ்தான பொறியாளர் நாகேஸ்வரராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×