search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தேர்"

    • அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது
    • உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர்.

    காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'சம்போ மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே மயிலாப்பூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செலச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது.

    மயிலாப்பூர் கோவிலில் இருந்து சில கிலோ மீட்டருக்கு பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், பிஸ்கட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இன்று காலை முதலே வழங்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாடவீதி, ராமகிருஷ்ண மடம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

     

    மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பகுதியிலும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் பகுதியே பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மேலும் உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 102 தொட்டிகள் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெ ரிய தொட்டிகள் ஆகும்.

    பக்தர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களின் குப்பைகளை இந்த தொட்டிகளில் போட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக 10 பேட்டரி வாகனங்கள், 4 இலகு ரக மோட்டார் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் குப்பை களை தொட்டிகளில் போடுமாறு 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக 269 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பகதர்கள் திரண்டதால் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவுள், கடலை, வெல்லத்தோடு, திருவீதி உலா வந்த சுவாமிக்கு படையல் வைத்தனர். மேலும் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தேர் வெள்ளோட்ட த்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

    • பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற்றது.
    • திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி பவானி வருகிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படைவீரான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ.28-ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மறுநாள் நவ.29 அன்று முதல் 1-ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஒரு நிமிஷம் அதனை தொடர்ந்து டிச.2-ம்தேதி அன்று காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெற்றது. மறுநாள் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி பவானி வருகிறது.

    அதனைத் தொடர்ந்து இன்று இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கும்பகோணம் டி.எஸ்.பி. அசோகன் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவா செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள்.

    • சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.
    • இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.

    அவினாசி :

    அவினாசி பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்கு குழு அறக்கட்டளை சார்பாக, அவினாசி கோவில் சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.

    இத்திருத்தேர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.இதையடுத்து திருத்தேர் அவினாசிலி ங்கேசுவரர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    ×