search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளோட்டம்"

    • சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
    • தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திருவள்ளு வர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மாதம் சீரமைப்பு பணி நடத்தப் பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதமே கடலில் வெள் ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்கு கிறது. இதைத் தொடர்ந்து விவேகா னந்தா என்ற மற்றொரு சுற்றுலா படகையும் சீர மைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்தப் படகு சின்னமுட்டம் துறை முகத்தில் உள்ள படகு கட்டும் தளத் துக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அன்றைய தினம் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இந்த படகு சீரமைக்கும் பணி அவசர அவசரமாக 3 நாட்களில் முடிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிவ டைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் விவேகானந்தா என்ற படகு இன்று காலை கடலில் இறக்கி சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வெள்ளோட்டம் விடப்பட்டது.

    அதன்பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டது.

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவுள், கடலை, வெல்லத்தோடு, திருவீதி உலா வந்த சுவாமிக்கு படையல் வைத்தனர். மேலும் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தேர் வெள்ளோட்ட த்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

    • குழாய் பதிக்க தனியாரின் நிலத்தை கையப்படுத்த வேண்டியுள்ளது.
    • 98.5 கி.மீ., தூரத்துக்கு தனியாருக்கு சொந்தமான நிலங்களில் குழாய் பதிக்கப்படுகிறது.

    அவினாசி : 

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டம் சார்ந்து 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி பொங்கல் அன்று வெள்ளோட்டம் பார்க்க நீர்வளத்துறை திட்டமிட்டது.

    சமீபத்தில், அமைச்சர் முத்துசாமி, தைப்பொங்கல் நாளில் திட்டம் நிறைவேறும் என ஈரோட்டில்கூறியிருந்தார். அதே சமயம்அமைச்சர் துரைமுருகன், திட்டம் கடந்த ஆட்சியில் அவசரமாக துவங்கப்பட்டு முடிக்காமல் சென்று விட்டனர்.

    ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்துக்கு தண்ணீரை குழாயில் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.

    குழாய் பதிக்க தனியாரின் நிலத்தை கையப்படுத்த வேண்டியுள்ளது. முதல்கட்ட பணி முடிந்த பின் அடுத்தகட்ட பணி துவங்கும் எனக் கூறியது அப்பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், அத்திக்கடவு திட்டத்தில் மொத்தம் 1,065 கி.மீ., நீளத்துக்கு பிரதான குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

    இதில் 98.5 கி.மீ., தூரத்துக்கு தனியாருக்கு சொந்தமான நிலங்களில் குழாய் பதிக்கப்படுகிறது. அவிநாசி மண்டலத்தில் 17 கி.மீ., தூரத்துக்கு ரப்பர் குழாய் பதிக்கப்பட வேண்டியுள்ளது.

    பவானி பகுதியில் 300 மீ., நீளத்துக்கு இலகு ரக குழாய் பதிக்கும் பணி நிலுவையில் உள்ளது. பவானி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் குழாய்களில் வெல்டிங் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன.

    பணியில் எந்தவொரு நிலுவையும் இல்லாமல் முழுமையடைந்த பின் வெள்ளோட்டம் பார்க்க நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்றனர்.

    ×