search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா படகு 3 நாட்களில் சீரமைப்பு பணி முடித்து இன்று காலை கடலில் வெள்ளோட்டம்
    X

    சுற்றுலா படகு 3 நாட்களில் சீரமைப்பு பணி முடித்து இன்று காலை கடலில் வெள்ளோட்டம்

    • சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
    • தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திருவள்ளு வர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மாதம் சீரமைப்பு பணி நடத்தப் பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதமே கடலில் வெள் ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்கு கிறது. இதைத் தொடர்ந்து விவேகா னந்தா என்ற மற்றொரு சுற்றுலா படகையும் சீர மைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்தப் படகு சின்னமுட்டம் துறை முகத்தில் உள்ள படகு கட்டும் தளத் துக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அன்றைய தினம் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இந்த படகு சீரமைக்கும் பணி அவசர அவசரமாக 3 நாட்களில் முடிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிவ டைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் விவேகானந்தா என்ற படகு இன்று காலை கடலில் இறக்கி சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வெள்ளோட்டம் விடப்பட்டது.

    அதன்பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டது.

    Next Story
    ×