search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கல்யாண வைபவம்"

    • சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் எம்.எம்.சி. காலனி காவேரி நகர் 6-வது தெருவில் சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. விழா தொடங்கிய 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    • ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ருக்குமணி சத்திய பாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேகம் விழா காலை 9மணிக்கு நடைபெற்றது.

    மாலை 7 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண கோலத்துடன் சுவாமி வீதி உலா வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஊர்வலத்தில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள்பஜனை பாடி வந்தனர்.

    இரவு சுபத்திரை திருமணம் நாடகமும் நடைபெற்றது.

    விழாவில் வடதண்டலம் சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • குடிசை கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையானது
    • பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள குடிசை கிராமத்தில் அமைந்திருக்கும் 100 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபி ராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம பெருமானின் 48வது மண்டல பூஜை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    ஸ்ரீராமர் சீதைக்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் ஸ்ரீ ராம பெருமாள் அருகில் கொண்டுவரப்பட்டது.

    இந்த திருக்கல்யாண நிகழ்வை ஏற்ப்பாடு செய்த ராஜ்குமார் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர்-அழகர்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நாளை நடக்கிறது.
    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ரெங்கமன்னார்-ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை(5-ந்தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி அணிந்த பட்டு வஸ்திரத்தை ஆண் டாள் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தான குழுவினர் கொண்டு வந்தனர்.

    இந்த வஸ்திரத்தை அணிந்து நாளை ஆண்டாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்பார்.

    நாளை இரவு கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூர கொட்டகையில் திருமணம் நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு திவ்யதேச மான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பங்குனி திருக்கல்யாண விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை நடக்கிறது.

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் மணந்து கொள்கிறார். திருக்கல் யாணத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்தளிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள 2 கோவில் மண்டபங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் கல்யாண விருந்து நடைபெறும்.

    திருக்கல்யாண மொய் செலுத்த சிறப்பு கவுண் டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழகர்கோவில் திருக்கல்யாண விழாவில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • நெல்வாய் ஸ்ரீபட்டாபிராமசாமி கோவிலில் நடந்தது

    அணைக்கட்டு:

    ராம நவனியை முன்னிட்டு ஸ்ரீ ராம பெருமாள், சீதைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் அமைந்திருக்கும் 750 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபிராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    புனர்பூசம் நட்சத்திரத்தில், ஸ்ரீ பட்டா பிராமசாமி பெருமாளுக்கு அதிகாலையில் பால், பழம், தேன் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து மாலை ஸ்ரீராமருக்கு காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    அதற்கு முன்னதாக பட்டாட்சியர்களால் நடனமாடி ஸ்ரீராமபெருமாளுக்கும் சீதைக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.

    இந்த திருக்கல்யாண நிகழ்வில் நெல்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் சீதை திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு கல்யாணத்தை கண்டுகளித்து தரிசனம் செய்து சென்றனர்.

    பின்னர் திருக்கல்யாணம் கான வந்த அனைத்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×