search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேணுகோபால சுவாமி திருக்கல்யாண வைபவம்
    X

    வேணுகோபால சுவாமி திருக்கல்யாண வைபவம்

    • ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ருக்குமணி சத்திய பாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேகம் விழா காலை 9மணிக்கு நடைபெற்றது.

    மாலை 7 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண கோலத்துடன் சுவாமி வீதி உலா வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஊர்வலத்தில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள்பஜனை பாடி வந்தனர்.

    இரவு சுபத்திரை திருமணம் நாடகமும் நடைபெற்றது.

    விழாவில் வடதண்டலம் சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×