search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukalyana Vaibhavam"

    • சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் எம்.எம்.சி. காலனி காவேரி நகர் 6-வது தெருவில் சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. விழா தொடங்கிய 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர்-அழகர்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நாளை நடக்கிறது.
    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ரெங்கமன்னார்-ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை(5-ந்தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி அணிந்த பட்டு வஸ்திரத்தை ஆண் டாள் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தான குழுவினர் கொண்டு வந்தனர்.

    இந்த வஸ்திரத்தை அணிந்து நாளை ஆண்டாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்பார்.

    நாளை இரவு கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூர கொட்டகையில் திருமணம் நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு திவ்யதேச மான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பங்குனி திருக்கல்யாண விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை நடக்கிறது.

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் மணந்து கொள்கிறார். திருக்கல் யாணத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்தளிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள 2 கோவில் மண்டபங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் கல்யாண விருந்து நடைபெறும்.

    திருக்கல்யாண மொய் செலுத்த சிறப்பு கவுண் டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழகர்கோவில் திருக்கல்யாண விழாவில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ×