search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varagi Amman"

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு முதல் முறையாக 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு யாகத்துடன் கூடிய வழிபாடு நடைபெற்றது.
    • காலை 9.50 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், காலை 10 மணிக்கு வாராகி அம்மனுக்கு ஹோமமும் நடந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் மஹா பிரத்தி யங்கிராதேவி - மஹா கால பைரவர் சித்தர் பீட ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு முதல் முறையாக 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு யாகத்துடன் கூடிய வழிபாடு நடைபெற்றது.

    தமிழகத்தில் பருவமழை நன்கு பெய்து பசுமை வளம் சிறக்கவேண்டியும், உலக மக்கள் கொடிய நோய்கள் இன்றி நலமாக வாழ வேண்டியும் மற்றும் வாழ்வில் கடன்தொல்லைகள் நீங்கி இல்லத்தில் செல்வம் பெரு கிடவும், கல்வி வளம் மேம்ப டவும், நல்ல அரசு வேலை கிடைக்கவும், தொழில்வளம் சிறக்கவும்,

    நோய்கள், வழக்குகள் தீர்ந்திடவும், அனைத்து மக்களும் செல்வச்செழிப்பு டன், பரிபூரணமான நல்வாழ்வு பெற்றிடவும் வேண்டி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு மஹா யாக வழிபாடுகள் காலை 9.30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடுகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

    காலை 9.50மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், காலை 10 மணிக்கு வாராகி அம்மனுக்கு ஹோமமும் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து, பகல் 11மணிக்கு வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்த மான சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு, ராசவள்ளிக்கிழங்கு, மர வள்ளிக்கிழங்கு, உருளைக் கிழங்கு மற்றும் கேரட், பீட்ரூட் போன்றவற்றுடன் பூமிக்கு அடியில் விளையும் அனைத்து வகையான பொருட்களும் என 2025கிலோ கிழங்கு வகைகள் கொண்டு யாகம் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் தமது குடும்பத்தி னருடன் திரளாக பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.

    தொடர்ந்து, மதியம் 12.30 மணிக்கு வாராஹி அம்மன், பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும், மதியம் 12.50 மணிக்கு தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நிறைவுறுதல் பூஜையும், மாலை 5 மணிக்கு தீபாராதனையும் நடை பெற்றது. முடிவில், பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.

    கிழங்கு வகைகள் யாகத்தினை முன்னிட்டு காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

    யாகத்திற்கான வழிபாடு களை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழி பாட்டு குழுவினர், மகளிரணி யினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் எம்.எம்.சி. காலனி காவேரி நகர் 6-வது தெருவில் சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. விழா தொடங்கிய 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    ×