ஸ்ரீ ராமர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

குடிசை கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையானது பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
ஸ்ரீ ராமர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள குடிசை கிராமத்தில் அமைந்திருக்கும் 100 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபி ராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம பெருமானின் 48வது மண்டல பூஜை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீராமர் சீதைக்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் ஸ்ரீ ராம பெருமாள் அருகில் கொண்டுவரப்பட்டது.

இந்த திருக்கல்யாண நிகழ்வை ஏற்ப்பாடு செய்த ராஜ்குமார் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com